மதுரை சித்திரை திருவிழா: நாளை கொடியேற்றம், 14ல் திருக்கல்யாணம் - 16ல் கள்ளழகர் எழுந்தருளல்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத்திருவிழா நாளைய தினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. 14ஆம் தேதி திருக்கல்யாணமும், 15ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறும். 16ஆம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
மதுரையின் அடையாளமாக விளங்கும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்த திருவிழா எளிமையாக நடந்தது மக்களை ஏமாற்றமடைய செய்தது.
தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது. தேர் புதுப்பித்தல் பணி, மாசி வீதிகளில் தேர் வலம் வருவதற்கான ஏற்பாடுகள், கோவிலில் மின் அலங்காரம் என பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மதுரை சித்திரைத் திருவிழா
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடந்தாலும், பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவே நகர் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இடையே முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் சுவாமி வழக்கம் போல் காலை, இரவு என இருவேளையும் மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர்.

கொடியேற்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு திருவிழாவும் தீர்த்தம் என்று சொல்லக்கூடிய திருவிழா நிறைவு நாளை முடிவு செய்து கொண்டு தொடங்க பெறுவதாகும். அதன்படி சித்திரை தீர்த்தத்தை கணக்கில் கொண்டு அமாவாசை கழித்த கார்த்திகை நட்சத்திரத்தில் நாளை கொடியேற்றத்துடன் சித்திரை பெருவிழா தொடங்குகிறது.

சுவாமி அம்மன் ஊர்வலம்
12 நாட்கள் நடைபெறும் இந்த உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா நாளை காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். விழாவில் வருகிற 12ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13ஆம் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது.

மீனாட்சி திருக்கல்யாணம்
விழாவில் சிகர நிகழ்ச்சியாக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்பத்தில் நடைபெறும். இதற்காக அந்த பகுதியில் பக்தர்கள் அமர்வதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகளும், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையிலும் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

டிக்கெட் முன்பதிவு
இதற்கான கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி கோவில் இணையதளத்தில் (WWW.maduraimeenakshi.Org) இன்று முதல் 7ஆம் தேதி வரை பெறும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் டிக்கெட் வாங்க வேண்டும். டிக்கெட் பெற்றவர்கள் அன்று காலை 9 மணி வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். திருக்கல்யாண விழாவில் இரவு மீனாட்சி அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.

சித்திரைத் தேரோட்டம்
திருவிழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர், பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவு இரு வேளைகளிலும் 4 மாசி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பர். திருக்கல்யாணத்திற்கு மறுநாள் வருகிற 15ஆம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 16ஆம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

சித்திரைத்திருவிழா முழு விபரம்
ஏப்ரல் 05, 2022 சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - கற்பக விருக்ஷ,சிம்ம வாகனம்
ஏப்ரல் 06, 2022 - பூத , அன்ன வாகனம்
ஏப்ரல் 07, 2022- கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
ஏப்ரல் 08, 2022 - தங்க பல்லக்கு
ஏப்ரல் 09, 2022 - வேடர் பறி லீலை - தங்க குதிரை வாகனம்
ஏப்ரல் 10, 2022 - சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை - ரிஷப வாகனம்
ஏப்ரல் 11, 2022- நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்
ஏப்ரல் 12, 2022 - ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் - வெள்ளி சிம்மாசன உலா
ஏப்ரல் 13, 2022 - ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் - இந்திர விமான உலா
ஏப்ரல் 14, 2022 ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் -யானை வாகனம் , புஷ்பபல்லக்கு
ஏப்ரல் 15, 2022 - தேரோட்டம் - சப்தாவர்ண சப்பரம்
ஏப்ரல் 15, 2022 - தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை அன்று இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை
கள்ளழகர் வைகையில் எழுந்தருளல்
ஏப்ரல் 16, 2022 - ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் - 1000 பொன்சம்பரத்துடன் - சைத்யோபசாரம் இரவு வண்டியூர்
ஏப்ரல் 17, 2022 - திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் - வண்டியூர் தேனுர் மண்டபம் - சேஷ வாகனம் (காலை) - கருட வாகனம் , பிற்பகல் - மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார காட்சி.
ஏப்ரல் 18, 2022 - காலை மோகனாவதாரம் - இரவு கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு
ஏப்ரல் 19, 2022 ஸ்ரீ கள்ளழகர் மலைக்குத் திருப்புவார்.
இரண்டாண்டுகளுக்குப் பிறகு சித்திரைத் திருவிழா நடைபெற உள்ளதால் பல லட்சக்கணக்கான மக்கள் மதுரைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications