மன்மத ஆண்டு: மிதுனம் ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர் சுப்ரமணியன்
இனிய புத்தாண்டு வாழ்த்துகளோடு ஸ்ரீ மன்மத வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் மிதுனம் ராசி அன்பர்களே இவ்வாண்டு நடக்கவிருக்கும் பலன்களை பார்ப்போம். இரட்டை சிந்தனை உள்ள மிதுனம் ராசி அன்பர்களே உங்கள் காரியங்களை பூர்த்தி செய்து கொள்ள பலவகையான யோசனைகளையும், தந்திரங்களையும் கையாள்வதில் சாமர்த்தியம் உள்ளவர்களே, வார்த்தைகளால் பிறரிடத்தில் தன் மதிப்பை காட்டிக்கொள்பவர்களே கள்ளத்தனமும் போலி ஆடம்பரமின்றி நடந்து கொள்ளும் மிதுனம் ராசி அன்பர்களே.

சனிபகவானால் நன்மை
இந்த ஆண்டு முன்னேற்றத்துக்கு உறுதுனையாக நிற்கப் போகிறவர் சனிபகவான் தான். அவர் தற்போது விருச்சிகம் ராசியில் இருக்கிறார். பணப்புழக்கத்தையும், செயல்பாட்டில் வெற்றியையும் கொடுப்பார். எதிரிகளை இருக்கும் இடம் தெரியமல் பறந்தோடச்செய்வார். தொழிலில் கடந்த காலத்தில் இருந்த மந்த நிலை மாறி வளர்ச்சியான போக்கு தென்படும். மேலும் சனியின் பத்தாம் இடத்துப் பார்வையும் சிறப்பாக அமையும். அதன் மூலம் அவர் பொருளாதார வளத்தையும், வாழ்வில் நல்ல முன்னேற்றத்தையும் கொடுப்பார்.

குருபகவானால் சிறப்பு
குரு உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அது மிகவும் உகந்த சிறப்பான நிலை எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களது ஆற்றல் மேம்படும். துணிச்சல் அதிகரிக்கும், பணவரவு கூடும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். உங்கள் தலைமையில் சுப நிகழ்ச்சி நிறைவேறும் சமூக அக்கறை கொண்ட மனிதராக விளங்குவீர்கள். உங்களால் இயன்ற உதவியை பிறருக்கு செய்து மகிழ்வீர்கள். குரு ஆனி மாதம் 29ம் நாள் 14-07-2015ல் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு செல்கிறார். இந்த நேரத்தில் அவரால் நன்மை தர இயலாது. முயற்ச்சிகளில் தடை ஏற்படும். எதிர்பார்த்த உயர்வு இருக்காது. மனதில் அவ்வப்போது குழப்பம் உருவாகலாம். எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செயல்படுவது நல்லது.

ராகுவினால் குழப்பம்
நிழல் கிரகமான ராகு தற்போது நான்காமிடமான கன்னியில் இருக்கிறார். இங்கு அவரால் நன்மை தர இயலாது. மனைவி மக்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை உருவாக்கலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு வாக்குவாதம் போன்றவற்றின் மூலம் அமைதி குறையும். அதே சமயம் கேது பத்தாமிடமான இடமான மீனத்தில் தற்போது இருந்து வருகிறார். இதனால் உஷ்ணம் மற்றும் தோல் தொடர்பான உபாதையை தரலாம். மருத்துவரின் ஆலோசனை அடிக்கடி தேவைப்படும். ஒவ்வாத உணவுகளை அறவே தவிர்ப்பது அவசியம். வீட்டில் பொருட்கள் காணாமல் போகலாம். வீட்டில் பாதுகாப்பு தொடர்பான விசயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்
வியாழக்கிழமை தோறும் ஸ்ரீதட்சிணா மூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும். அமாவாசை அன்று ஸ்ரீஆஞ்சநேய மூர்த்திக்கு வடைமாலை சாற்றி மலர்களால் அர்ஜித்து வர இவ்வாண்டு அனைத்து நன்மைகளும் கிட்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications