நவராத்திரி 2017 : கொலு பூஜைகள், ஆயுத பூஜை, விஜயதசமி பூஜைக்கு நல்ல நேரங்கள்
ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்
சென்னை : முப்பெரும் தேவிகளின் அருளை வேண்டி இந்துக்களால் முறைப்படி விரதமிருந்து அனுஷ்ட்டிக்கப்படுகின்ற நவராத்திரி விரதம் இன்று ஆரம்பமாவதுடன் ஒன்பது நாட்கள் விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இவ்வாண்டு (ஹேவிளம்பி வருடம்) புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமை இன்று தொடங்குகிறது. பூஜை செய்வதற்கான நல்ல நேரங்கள் கணிக்கப்பட்டுள்ளன.

பரப்பிரம்ம ஸ்வரூபிணியான பராசக்தி உலக நன்மைக்காக ஐந்து முறை அவதரித்திருக்கிறாள்.
முதலாவதாக மஹாவிஷ்ணு பாற்கடலில் ஸ்யனித்திருக்கும் பொழுது நாபியிலிருந்த பிரம்மாவிற்குப் பிரசன்னமாகி அவருக்குத் தெளிவையும் சிருஷ்டிக்கும் வல்லமையையும் கொடுத்தாள்.
இரண்டாவதாக மஹாவிஷ்ணுவின் மூலமாக மோகினியாக அவதரித்தாள். மூன்றாவதாக தட்சனின் புதல்வியாக தாட்சாயணி என்னும் பெயருடன் அவதரித்தாள்.
நான்காவதாக ஈஸ்வரனை மணக்க பார்வதி தேவியாக அவதரித்தாள். ஐந்தாவதாக பண்டாசுரனை அழிக்க லலிதாம்பாள் என்னும் பெயருடன் ஸ்ரீசக்கரம் என்ற ரதத்தில் அவதரித்தாள்.
நவராத்திரி பூஜைக்கு நல்ல நேரம்:
நவராத்திரி விரதம் விரதம் இன்று புரட்டாசி மாதம் 05ம் நாள் (21-09-2017) தேதி தொடங்கி புரட்டாசி 13ம் தேதி (29-09-2017) வரை அனுஷ்டிக்கப்படும்.
நவராத்திரி ஒன்பது நாட்களிலும் ஒன்பது வகையான புஷ்பம் கொண்டு ஒன்பது வகையான அலங்காரம் செய்வது வழக்கம்.
நவராத்திரியில் சுமங்கலிகளையும் பத்து வயதிற்க்குட்பட்ட கன்னிப் பெண்களையும் பூஜிப்பது நன்மையைத் தரும் சரஸ்வதிக்குரிய நாளில் ஆரம்பித்து திருவோண நட்சத்திர நாளில் நிறைவு செய்ய வேண்டும் என்று விரத நிர்ணய விதி இருப்பதால் இவ்வாண்டு சரஸ்வதி பூசை 29-09-2017 வெள்ளிக் கிழமை நிறைவுபெறுகின்றது.

மஹா நவமி என்னும் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜையன்று சரஸ்வதி கடாட்சம் வேண்டி தங்கள் ஜீவனத்திற்க்கு ஆதாரமான ஆயுதங்கள், கருவிகள், இசைக் கருவிகள் இவைகளுடன் புத்தகங்களையும் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.
மறுநாள் விஜய தசமி அன்று மறு பூஜை செய்து தொழில் தொடங்கினால் அவ்வருடம் முழுவதும் நல்ல செல்வச் செழிப்பு ஏற்படும்.
நவராத்திரி பூஜை தொடக்கம்:
புரட்டாசி 05 - செப்டம்பர் வியாழக் கிழமை காலை 06-00 முதல் 09-00 வரை பகல் 10-30 முதல் 01-30 வரை நல்ல நேரம்.

சாமி கும்பிட நல்ல நேரம்
ஆயுத பூஜை - சரஸ்வதி சாமி கும்பிட நல்ல நேரம்: புரட்டாசி 13 செப்டம்பர் 29 வெள்ளிக் கிழமை மாலை 05-00 மணி முதல் 06-00 வரை நல்ல நேரம்.

விஜய தசமி சாமி கும்பிட நல்ல நேரம் : புரட்டாசி 14 நவம்பர் 30ம் தேதி சனிக் கிழமை மறு பூஜை செய்வதற்க்கு நல்ல நேரம் அதிகாலை 5-00 மணி முதல் 6-00 மணிவரை அல்லது பகல் 11-00 மணி முதல் 12-00 மணி வரை நல்ல நேரம்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications