புரட்டாசி அமாவாசை : சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை
புரட்டாசி அமாவாசை அன்று சமயபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி கிடையாது என்று ஆலய நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய் உள்ளவர்கள் கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிவதை தவிர்க்க வேண்டும் என்றும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி: புரட்டாசி அமாவாசை அன்று இரவு நேரத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது என்று கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் உள்ள மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். குறிப்பாக, அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், பல பரிசோதனைகளுக்கு பின்னரே கோவிலுக்கு உள்ளே செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில் புரட்டாசி மாத அமாவாசை நாளை வெள்ளிக்கிழமை வருகிறது என கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புரட்டாசி மாத அமாவாசையான நாளை மறுநாள் கோவிலில் முடிகாணிக்கை மற்றும் தரிசன நேரம் காலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கோவில் சார்ந்த இடங்களில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. அரசு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

65 வயதிற்கு மேற்பட்டவர்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிவதை தவிர்க்கவும்.
கோவிலுக்குள் தேங்காய், பழம், பூ கொண்டு வர அனுமதி இல்லை. பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். மேலும், நோய் அறிகுறி இல்லாத பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications