விருச்சிகத்தில் சனி இருந்தால்.. தமிழகத்தில் விபரீதம் நேரிடும்? #சனிப்பெயர்ச்சி2017
விருச்சிக ராசியில் சனிபகவான் வந்து அமர்ந்த போதெல்லாம் தமிழக அரசியலில் பல விபரீத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
Recommended Video

சென்னை: சனிபகவான் செவ்வாய் வீடான விருச்சிகத்தில் சஞ்சாரிக்கும் பொழுதெல்லாம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் முதல்வராக இருந்தவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
செவ்வாயும் சனியும் பகை கிரங்கள். பகை வீட்டில் சனி சஞ்சாரிக்கும் போதெல்லாம் மிகப்பெரிய மாற்றங்கள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளன.
விருச்சிகம் நீர் ராசி இந்த ராசியில் நெருப்பு கிரகமான செவ்வாய் சனியோடு இணைந்திருக்கும் போது பெருவெள்ளம், புயல் நிகழ்ந்திருக்கிறது.
சனிபகவான் மேஷம் - சிம்மம் - விருச்சிகம் ஆகிய ராசிகளில் சஞ்சாரம் செய்யும்போது நாட்டில் புயல், கனமழை, வறட்சி, ஆட்சியில் மாற்றங்கள் பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும். செவ்வாய், சூரியன் சனிக்கு பகை என்பதனால்தான் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன.

தனுசுக்கு இடம்பெயரும் சனி
சனிபகவான் பெயர்ச்சி ஆகி ரிஷபம் - கன்னி - தனுசு ஆகிய ராசிகளில் சஞ்சரிக்கும்போது சிக்கல்களுக்கு தீர்வுகள் ஏற்படும். சனிபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைய உள்ளார்.

1955 டிசம்பர் சனிப்பெயர்ச்சி
1955ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி சனி பகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறினார்.
1956 நவம்பரில் 200 பேரை பலி கொண்ட அரியலூர் ரயில் விபத்து நிகழ்ந்தது.
1957 ஏப்ரல் மாதம் ஒரணா இரண்டணா என்று இருந்த நயா பைசா முறை ஒழிந்து, தசம நாணய முறைக்கு நாடு மாறியது. ஒரு ரூபாய்க்கு 100 காசுகள் என்ற நடைமுறை வந்தது.
1957ஆம் ஆண்டு கடும் வறட்சி நிலவியது.

எம்ஜிஆர் மரணம்
1985ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி அன்று வியாழக்கிழமை சனி பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறினார். 1986 - 1987 ஆம் ஆண்டு கடும் வறட்சி நிலவியது.
1987 டிசம்பர் மாதம் எம். ஜி. ஆர் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து அதிமுக பிளவுபட்டது.

வறட்சியும் வெள்ளமும்
2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி அன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2.44க்கு சனி பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறினார். 2015ஆம் ஆண்டு நூற்றாண்டுகளில் இல்லாத மழை வெள்ளம் ஏற்பட்டது. 2016 ஆம் ஆண்டு மழை குறைந்து கடும் வறட்சி ஏற்பட்டது. சென்னையை வர்தா புயல் தாக்கியதில் தலைநகர் சிதைந்து சின்னாபின்னமானது.

ஜெயலலிதா மரணம்
2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500, 1000 ரூபாய் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டது.
2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார்.
2016 பிப்ரவரி மாதம் அதிமுக பிளவு பட்டது. கட்சியும், கொடி, சின்னம் முடக்கப்பட்டது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications