சுக்கிரதோஷம் விலக சேர்ந்தபூமங்கலம் சிவனை வணங்குங்கள்
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் இன்று நாம் தரிசிக்கவிருப்பது நவகைலாய வரிசையில் ஒன்பதாவது இடத்தைப் பெறும் இடம் சேர்ந்தபூமங்கலம் ஆகும். இத்திருக்கோயில் சுக்கிரனின் ஆட்சி பெற்ற திருக்கோயிலாகும்

புராணச் சிறப்பு:
அகத்தியர் உரோமச முனிவரை அழைத்து தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் வேண்டியது கிடைக்கும் என்றும் உன்னுடன் ஒன்பது மலர்களைத் தண்ணீரில் அனுப்புகிறேன் இம்மலர்கள் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அவ்விடத்தில் சிவலிஙத்தை வைத்து வழிபடு என கூறியதில் கடைசியாக ஒன்பதாவது மலர் இத்தலத்தில் நிற்க இங்கு உரோமச முனிவர் சிவலிங்க வழிபாடு செய்த தலமாகும். நிறைவாக பூ சேர்ந்த மங்கலம் ஆனதால் சேர்ந்தபூமங்கலம் என இத்தலம் அழைக்கப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்பு:
தாமிரபரணி ஆற்றங்கரையில் நவக்கிரகங்களுள் சுக்கிரன் தலமாக அமைந்துள்ள இத்தலத்தை குலோத்துங்க வர்ம பாண்டிய மன்னன் கட்டியதாக செவிவழிச் செய்தி கூறுகிறது. இவ்வூர் முற்காலத்தில் குடநாட்டு ஆத்தூர் சேர்ந்த மங்கலம் என்றும் அழைக்கப்பட்டு வந்ததாக கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிச் சிறப்பு:
நவ கைலாயத்தில் ஒன்பதாவது இடத்தைப் பெறும் இடம் சேர்ந்தபூமங்கலம். சுக்கிரனின் ஆட்சிப் பெற்ற கோயிலாகும். இந்த ஊரின் அருகில் தான் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமமாகிறது. எத்தனையோ இயற்கைச் சீற்றத்தால் இந்த பகுதி பாதிக்கப்பட்டிருந்தாலும் இத்திருக்கோயில் மட்டுமே கம்பீரமாக நிற்கிறது.
சுக்கிரதோஷம் விலகும்
இத்தல இறைவனை வழிபடுவது கஞ்சனூர் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வணங்குவதற்கு சமமாகும். சுக்கிரன் தலமாதலால் இங்கு வழிபடுவோருக்கு சுக்கிர தோஷம் நீங்கி தீமைகள் விலகும். திருமணம் நல்லபடி அமையும், இல்லறம் சுகம் பெறும், உடல் ஆரோஅகியம், மனநிம்மதி பெற்று மரண பயம் நீங்கி நன்மக்கட் பேறு பெற்று என்றும் இன்பமாக வாழலாம்.
தாமிரபரணி நதி கடலோடு சங்கமிக்கும் இப்பகுதியில் அகத்தியர் வந்து நீராடி சிவனை வழிபட்டுச் சென்றுள்ளனர்.
அமைவிடம்:
தூத்துகுடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆத்தூர் என்ற ஊரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சேர்ந்தபூமங்கலம் உள்ளது. தூத்துகுடியில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவிலும் திருச்செந்தூரில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இறைவன் : அருள்மிகு கைலாசநாதர்
இறைவி : அருள்தரும் சௌந்தர்ய நாயகி அம்மன்
தீர்த்தம் : தாமிர புஷ்கரணி
தலவிருட்சம் : வில்வ மரம்
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications