தை முதல் செவ்வாய் : நாட்டரசன் கோட்டையில் களைகட்டிய நகரத்தார் பொங்கல்
தை மாதம் முதல் செவ்வாய் கிழமை நாளில் பொங்கல் வைப்பதற்காக நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோவிலில் உறவுகள் ஒன்று கூடுவது மட்டுமல்லாது நகரத்தார் சமுதாயத்தில் உள்ள இளைஞர்கள், இளம் பெண்களுக்கும் திருமணம் ப
சிவகங்கை: நமது முன்னோர்கள் பண்டிகைகள் கொண்டாட்டங்களை காரணமில்லாமல் வைத்ததில்லை. அனைவரும் ஒன்று கூடி இணைந்து கொண்டாடும் பண்டிகை நாட்களில் புதிய உறவுகள் மலரும். இருமனங்கள் இணையும் திருமணங்கள் நிகழ்ந்தேறும் என்று நினைத்துதான் பொங்கல் பண்டிகைகளை கிராமங்களில் இன்றைக்கும் கொண்டாடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் நகரத்தார் சமூகத்தினர் ஆண்டுதோறும் தை மாதம் வரும் முதல் செவ்வாய் கிழமை நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டு அனைத்து குடும்பத்தினரும் இணைந்து சாமி கும்பிடுவது வழக்கம். செவ்வாய் பொங்கல் என அழைக்கப்படும் இந்த நாளில் உறவுகள் ஒன்று கூடுவது மட்டுமல்லாது நகரத்தார் சமுதாயத்தில் உள்ள இளைஞர்கள், இளம் பெண்களுக்கும் திருமணம் பேசி முடிப்பதும் உண்டு. எனவே வெளிநாடுகளில் வசிக்கும் நகரத்தார் குடும்பத்தினரும் செவ்வாய் பொங்கலில் தவறாது கலந்து கொள்கின்றனர்.

இந்த ஆண்டுக்கான செவ்வாய் பொங்கல் விழா நேற்று மாலை வெகு சிறப்பாக நடந்தது. இதில், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய பெரு நகரங்களில் வசித்து வரும் நகரத்தார்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
நாட்டரசன் கோட்டையில் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வந்தனர். ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட நகரத்தார் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் வணிகம் செய்வதில் கை தேர்ந்தவர்களாக இருந்தனர். நாளடைவில் வணிகத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். துபாய், மலேசியா, சிங்கப்பூர், சவூதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, மதுரை, கோவை போன்ற வெளிமாவட்டங்களுக்கும் சென்றுவிட்டனர். பலரும் வெளியேறி விட்டாலும் ஒவ்வொரு வருடமும் தை மாத முதல் செவ்வாய்கிழமை அன்று சொந்த ஊர் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஒரு குடும்பத்திற்கு ஒரு புள்ளி என வழங்கப்படுகிறது. தை முதல் செவ்வாய்கிழமைக்கு முந்தைய நாளில் அனைத்து புள்ளிகளின் பெயர்களை ஒரு சீட்டில் எழுதி குடத்தில் போட்டு குலுக்குவார்கள். அதில் வரும் ஒரே ஒரு நபருக்கு முன்னுரிமை தந்து முதல் பொங்கல் வைக்க உரிமை தருவார்கள். முதல் பொங்கல் வைப்பவர்கள் மண்பானையில் கோயில் முன்புறம் உள்ள மைதானத்தில் வைப்பார்கள்.அவர்களுக்கு மற்றவர்கள் சேர்ந்து முதல் மரியாதை வழங்குகின்றனர். அவர்களது பொங்கல் பானையில் அனைவரும் சேர்ந்து பால் ஊற்றி பொங்கல் வைபவத்தை தொடங்கினர். பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து கோயில் முன்புறம் உள்ள மைதானத்தில் நகரத்தார் சமூகத்தினர் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். நள்ளிரவு கிடாவெட்டு விருந்து வைபவம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன், ஆஸ்திரேலியாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்களுக்கு கரகாட்டம் ஆடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில், நகரத்தார் சமூகத்தினரால் பின்பற்றப்படும், "செவ்வாய் பொங்கல்' விழா 150 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. உறவுகளை வலுப்படுத்தவும் புதிய உறவுகளை உருவாக்கவும் இந்த பொங்கல் விழா பாரம்பரியமாக கொண்டாடப்படுவதாக நகரத்தார் சமுதாயத்தினர் தெரிவிக்கின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications