ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து கருட வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீரங்கம் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9ஆம் நாள் கருட மண்டபத்தில் நம்பெருமாள் கருட வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து அருள்பாலித்தார்.
திருச்சி: சித்திரை தேர்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்களை அணிந்து கருட வாகனத்தில் கம்பீரமாக காட்சிஅளித்தார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை நம்பெருமாள் அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது.
கருட வாகனம், அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார் நம்பெருமாள். கொரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி 2ம் ஆண்டாக விழா நடைபெறுகிறது.

குதிரை வாகனத்தில் நம்பெருமாள்
7ம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.சனிக்கிழமை காலையில் வெள்ளி குதிரை வாகனம், மாலை தங்க குதிரை வாகனத்தில் கருடமண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டாள் சூடிய மாலை
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்தமும், உறவும் மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் இருந்து வந்தது. ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் மங்களப்பொருட்கள் பரிவர்த்தனை நடத்து வருகிறது.

கோவிலில் ஊர்வலம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு சனிக்கிழமையன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட ஆண்டாள் அணிந்த மாலை, பட்டு வஸ்திரங்கள், மலர்கள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட கிளிகள், பழங்கள் உள்ளிட்ட மங்கள பொருட்கள் ரங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. பின்னர் அவை கோவில் வளாகத்திற்குள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

நம்பெருமாள் அருளாசி
9ஆம் திருநாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை நம்பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்களை அணிந்து கருட வாகனத்தில் கம்பீரமாக எழுந்தருளினார். கருடமண்டபத்தில் நம்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளிய அழகினை பக்தர்கள் நேரலையில் கண்டு தரிசனம் செய்தனர்.

ஆளும் பல்லாக்கு
திங்கட்கிழமை சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான செவ்வாய்கிழமை நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளுகிறார். இத்துடன் சித்திரை தேர்த்திருவிழா நிறைவடைகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications