தை மாத ராசி பலன் 2024: சூரியனுடன் கூட்டணி சேரும் உச்சம் பெற்ற செவ்வாய்.. ருசக யோகம் யாருக்கு?
சென்னை: தமிழ் மாதங்களில் தை மாதம் பத்தாவது மாதம். மகர ராசிக்குள் சூரியன் நுழைவதால் மகரமாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தை மாதத்தில் சனியின் வீடான மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெற்று அமரப்போவதால் ருசக யோகம் உருவாகப்போகிறது. இந்த கிரகங்களின் கூட்டணியால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
ருசக யோகம்: கேந்திரம் எனக் கூறப்படும் லக்கினம், 4, 7, 10 ஆகிய இடங்களில் செவ்வாய் அமையும்போது ருசக யோகத்தை அளிப்பார். சர லக்கினங்கள் எனப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம், ஸ்திர லக்கினங்களான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய எட்டு லக்கினங்களுக்கு மட்டுமே ருசக யோகம் செயல்படும்.

சிம்மம் : உங்கள் ராசிக்கு அதிபதியான சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார். அலுவலகத்தில் அதிகாரிகளினால் தொல்லை உண்டாகும், பிறரின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். செவ்வாய் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகளால் நன்மைகள் உண்டாகும். உச்சம் பெற்ற செவ்வாயின் பார்வை கிடைப்பதால் திருமண யோகம் கைகூடி வரும். மாத பிற்பகுதியில் ஆறாம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். வீடு,நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். இந்த மாதம் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கண்டச்சனி காலம் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிகமான கவனம் செலுத்தவும்.
கன்னி : சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருப்பதால் இந்த மாதம் அடிக்கடி உல்லாசப் பயணம் செல்வீர்கள், அப்பாவின் சொத்துக்களை பராமரிப்பதற்க்காக செலவுகள் செய்வீர்கள். வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பர்களுக்கு வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் விருத்தியாகும். வேலை விசயமாக செல்லும் வெளியூர் பயணம் லாபத்தைத் தரும். வீடு மாறும் நிலை உண்டாகும். புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்ய நன்மை உண்டாகும்.
துலாம் : உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் சூரியன் பயணம் செய்வதால் வீடு சொத்து வாங்கலாம். அரசாங்க ஒதுக்கீட்டின் மூலம் வீடு நிலம் கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருக்கிறார் சகோதரர்களுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் 22ஆம் தேதிக்குப் பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும். ருசக யோகம் கிடைக்கப்போகிறது தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கம். அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் மூலம் பண வருமானம் இரட்டிப்பு மடங்காக கிடைக்கும், வியாபாரம் செல்வ வளம் சிறப்படையும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும் குடும்பத்தில் குதூகலம் கூடும்.
விருச்சிகம் : சூரியன் மூன்றாமிடத்தில் பயணம் செய்யப்போவதால் அரசாங்க ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும், தொழிலின் காரணமாக அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். உங்கள் ராசி அதிபதியான செவ்வாய் வருமானத்தை அதிகரிப்பார். உச்சம் பெறப்போகும் செவ்வாய், நில புலன்களின் மூலம் லாபம் உண்டாகும் 22ஆம் தேதி முதல் வீடு நிலம் வாங்கலாம். தரகு கமிஷன் மூலம் பண வரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் இந்த மாதம் தேடி வரும். தை பிறந்தாலே பொருளாதாரமும் உடல் ஆரோக்கியம் சிறப்படையும். பெண்கள் பொன் நகைகள் வாங்குவீர்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications