திருக்கார்த்திகை தீப திருவிழா : திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த ஐந்து தேர்கள்
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான அருணாச்சலேஸ்வரர் தேரோட்டம் இன்று நடைபெற்றது.
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தினமும் திருவிழா தான் என்றாலும், கார்த்திகை மாதத்தில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா தான் அனைத்திற்கும் மகுடம் சூட்டுவதாக இருக்கும். கார்த்திகை மாதம் என்றாலே, நம் நினைவில் சட்டென்று நிழலாடுவது, அருணாச்சலேஸ்வரர் கோவிலும், கிரிவலமும், அங்கு ஈசனே மலையாக வீற்றிருக்கும் திருவண்ணாமலை குன்றின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபமும் தான்.
பத்து நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வே ஏழாம் நாள் நடைபெறும் அருணாச்சலேஸ்வரர் தேரோட்டமும், பத்தாம் நாளன்று மாலை வேளையில் மலையின் மீது ஏற்றப்படும் மஹா தீபம் தான். இந்த நிகழ்வுகளைக் காண்பதற்காகவே லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் தங்கியிருந்து இரண்டு நிகழ்வுகளையும் தரிசித்துவிட்டு செல்வதுண்டு.

இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று பஞ்சமூர்த்திகளின் தரிசனத்துடன், கொடியேற்றப்பட்டு அதிகாரபூர்வாக தொடங்கியது. திருவண்ணாமலையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தாலும், அன்றிலிருந்து திருவண்ணாமலையே பக்தர்களின் கூட்டத்தால் அலைமோதுகிறது.
கார்த்திகை தீபத்திருவிழாவின் 4ஆவது நாளான கடந்த புதனன்று இரவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் பிள்ளையார், வெள்ளி மயில் வாகனத்தில் சுப்ரமணியர், வெள்ளி கற்பகவிருட்ச வாகனத்தில் உண்ணாமுலை அம்மன் உடன் அண்ணாமலையார், வெள்ளி காமதேனு வாகனத்தில் அன்னை பராசக்தி, வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவர்கள் மாட வீதிகளில் வலம் வந்து காத்திருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தொடர்ந்து 5ஆம் நாளான வியாழனன்று முற்பகல் 11 மணியளவில் மூஷிக வாகனத்தில் பிள்ளையாரும், கண்ணாடி ரிஷப வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரரும், அருணாச்சலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரத்திற்கு எதிரில் அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். பின்பு அங்கு சிறப்பு பூஜையும் தீபாராதனையும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து 6ஆம் நாளான நேற்று வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளி விமானத்தில் பிள்ளையார், வெள்ளி ஆச்சி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணியர், வெள்ளித் தேரில் உண்ணாமுலை உடன் அண்ணாமலையார், வெள்ளி இந்திர விமானத்தில் அன்னை பராசக்தி அம்பாள், வெள்ளி விமானத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முன்னதாக இன்று காலையில் 63 நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் நாயன்மார்களை சுமந்து மாடவீதிகளில் வலம் வந்தனர்.
தீபத்திருவிழாவின் ஏழாவது நாளான இன்று மகா தேரோட்டம் எனப்படும் 5 தேர்கள் பவனி இன்று காலை தொடங்கியது. காலை 7.05 மணிக்கு விநாயகர் தேர் ஊர்வலம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுப்பிரமணியர் தேர் மாடவீதியில் பவனி வந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுந்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர்கள் பவனி வந்தது. மதியம் 2 மணி அளவில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் அருள்பாலிக்கும் பெரிய தேர் எனப்படும் மகா ரதம் ஊர்வலம் நடைபெறுகிறது. மகா ரதம் நிலையை அடைந்ததும் பராசக்தி அம்மன் புறப்பாடு நடைபெறும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து செல்வது அதன் தனிச்சிறப்பாகும். தேரோட்டத்தின் நிறைவாக சண்டிகேஸ்வரர் தேர் பவனி நடைபெறும்.
ஐந்து தேர்கள் பவனி வந்த பின்னர் பிள்ளை வரம் வேண்டி பிள்ளை பெற்ற பக்தர்கள் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். தேரோட்டத்தை தரிசிப்பதற்காகவே லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். தேரோட்டத்தை முன்னிட்டு சுமார் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications