பொங்கல் 2024.. புதுப்பானையில் பொங்கல்.. இந்த திசையில் பொங்கல் பொங்கினால் பதவி உயர்வு.. செக் பண்ணுங்க
சென்னை: புதுப்பானையில் புத்தரிசியிட்டு வெல்லம் போட்டு பால் ஊற்றி செய்யும் பொங்கலின் ருசியே தனிதான். தை பொங்கல் நாளில் பொங்கல் வைக்க நல்ல நேரம் பார்ப்பது வழக்கம். அது போல பொங்கல் பானையில் இருந்து பால் பொங்கி அது வழியும் திசையும் நமக்கு ஏற்படும் நன்மை தீமைகளை உணர்த்துமாம்.
மகர சங்கராந்தி: சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் பயணத்தொடங்கும் நாள் தை திருநாளாக கொண்டாடப்படுகிறது. சூரியனின் வடதிசை தொடங்கும் காலமே உத்தராயண புண்ணியகாலமாகும். மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் நாளினை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.

பொங்கும் பொங்கல்: பொங்கல் என்பது பொங்கு என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். அறுவடை முடிந்து புது நெல் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது விவசாய பெருமக்களின் நம்பிக்கை. நம் வாழ்க்கையில் வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது.
தை மகள்: மார்கழி மாதக் குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது என்பதால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி உண்டானது.
மஞ்சள் கொத்து: பொங்கல் பானையின் கழுத்துப்பகுதிகளில், மாவிலை கட்டி, விபூதிப்பூச்சுகளும், சந்தனம் குங்குமம் ஆகியவற்றால் பொட்டு வைத்தும், அலங்கரிப்பார்கள். தண்ணீரும் பாலும் சேர்ந்துப் பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு.
சூரிய வழிபாடு: பொங்கல்பானை நுரைத்துப்பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது நமது பண்பாடு. பானையில் இருந்து பொங்கிக் தள்ளும் அந்த நுரைத்த பால் எந்தத்திசையில் வழிகிறது என்று பார்த்துக் வணங்குவார்கள். கிழக்கு, வடக்கு, நோக்கி பொங்கிய பால்வழிந்தால் நம் வீட்டில் நல்லது நடைபெறும் என்பது நம்பிக்கை.
நகை பணம் சேரும்: பொங்கல் பானையில் இருந்து பொங்கும் பால் கிழக்கு திசையில் பொங்கி வழிந்தால், நாம் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. வீடு, வண்டி, வாகனம் வீட்டிற்குத் தேவையான ஏதேனும் பொருட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதனை வாங்கி மகிழ்வீர்கள். நகை, பணம் அதிகம் சேரும் என்பது நம்பிக்கை.
சுப நிகழ்ச்சிகள்: பொங்கல் பானையில் இருந்து பொங்கும் பால் மேற்கு பக்கத்தில் பொங்கி வழிந்தால், சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். இந்த வருடத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். வருமானம் அதிகரிப்பதோடு கூடவே சுப செலவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
பதவி உயர்வு: வடக்கு திசையில் பொங்கி வழிந்தால் நம்முடைய வீட்டில் பண வரவு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வீட்டில் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து சம்மந்தமாக பேச்சுகள் சுமூகமாக முடிவுக்கு வரும். நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாக கொடுத்த பணம் எந்த தடங்கலும் இன்றி கைக்கு வந்து சேரும்.
தெற்கு திசை: பொங்கல் தெற்கு திசையில் பொங்கி வழித்தால் சுப காரியங்களில் சற்று தாமதம் ஏற்படும். அந்த வருடம் முழுவதும், மருத்துவ செலவுகள் அதிகம் இருக்கும். உடல் நிலையில் அதிக சோர்வு காணப்படும். எனவே உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை.
பொங்கும் பொங்கல்: பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று வீட்டில் உள்ள அனைவரும் சொல்லி ஆரவாரம் செய்து மங்கல ஒலியாக குலவையிட்டு பானையில் அரிசியையும், பாலையும் இட்டு மகிழ்ச்சி பொங்கித்ததும்பும் விழா பொங்கல் விழா. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் நோன்பு கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த நோன்பை முடிப்பார்கள்.
மகாலட்சுமி வரும் நாள்: நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய கால்நடை, போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது. பொங்கல் நாளில் அன்னை மகாலட்சுமி வீட்டிற்கு வரும் நாள் என்ற நம்பிக்கை உள்ளது, அன்னை மகாலட்சுமியை தங்க வைப்பதற்காக வீட்டை விட்டு எதையும் வெளியேற்றக் கூடாது என்பது ஐதீகம்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications