அடுத்த 108 நாட்கள்.. மேஷம் - மீனம் 12 ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் - முழு விவரம்
ராசி பலன்: குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
குரு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யுக்கூடிய உன்னதமான குருபுஷ்ய யோகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக அக்டோபர் 8 ஆம் தேதி முதல் சனி குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். நவம்பர் 25 ஆம் தேதி வரை சனி வக்கிரமாகியும், அதற்கு பின்னர் வக்கிர நிவர்த்தியாகியும் சஞ்சாரம் ஆகிறார்.

வக்கிர கிரகம்
நவம்பர் 25 வரை சனி வக்கிரம் என்பதால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் அல்லது மீனம் ராசியில் உங்களுக்கு வக்கிரமான கிரகம் இருந்தால் அதிர்ஷ்டத்தை கண்டிப்பாக கொட்டிக் கிடக்கும். வக்கிரமாக கிரகம் இல்லையென்றால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நவம்பர் 25 ஆம் தேதிக்குப் பின்னர் சனி வக்கிர நிவர்த்தி ஆன பிறகு அதே பூரட்டாதி நட்சத்திரத்தில் உத்திரட்டாதியை நோக்கிச் செல்லும். அதற்குப் பிறகு கிரகங்கள் வக்கிரமாக இல்லாத ராசியினருக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் பெறும் 6 ராசிகள்
குரு நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும்போது வேலை, தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். அந்த வகையில், இந்த காலகட்டத்தில் ரிஷபம், கடகம், விருச்சிகம், கன்னி, மீனம் ஆகிய 5 ராசியினருக்கு வேலையில் மாற்றம், உத்தியோகத்தில் ஏற்றம், தொழிலில் ஏற்றம், பதவி உயர்வு கிடைக்கக் கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
3 ராசியினர் கவனம்
தனுசு ராசியினருக்கும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். 6 ராசியினருக்கு நல்ல வாய்ப்புகளும், வெற்றியும் கிடைக்கும். மேஷம், சிம்மம், கும்பம் சிறிது கவனமாக இருப்பது நல்லது. புதிய வேலை, மாறுதல் ஆகியவை சாதமாக இருக்கும் ராசிகள் 3 ராசியினர் ஆவார். ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய 3 ராசிகளுக்கு புதிய வேலை வாய்ப்புகள், புதிய தொழில், புதிய வியாபாரம், புதிய முயற்சியில் கண்டிப்பாக வெற்றி பெறும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
புதிய வேலை
இருக்கும் வேலையில் சிறிய மாற்றங்கள் கொடுக்கலாம் என்றால் கடகம், மீனம், விருச்சிகத்துக்கு அருமையாக இருக்கும். மீனம், ரிஷபம், மகரம், கன்னி, விருச்சிகம், தனுசு ராசியில் கேது இருந்தால் கண்டிப்பாக வேலையை விட்டுவிட்டு புதிய வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
ரிஷபம், மகரம், கன்னி ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும். கன்னி ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கும், மகர ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு புதிய தொழில் கிடைக்கும் யோகம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications