Sani Peyarchi: தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனியிலும் அதிர்ஷ்டம்.. தினமும் இதை மட்டும் செய்து பாருங்க
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும பலன்கள, பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு [Dhanusu Sani peyarchi palan]
தனுசு ராசியினருக்கு 3 ஆம் இடத்தில் இருந்து வந்த சனி பகவான் தற்போது 4 ஆம் இடத்துக்கு அர்த்தாஷ்டம சனியாகப் பெயர்ச்சி ஆகியிருக்கிறார். தினந்தோறும் உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும். அதுதான் சிறந்த பரிகாரம். உடற்பயிற்சி செய்யவில்லையெனில் தேவையில்லாத மன அழுத்தமும், பிரச்சனைகளும் வருவதற்கான வாய்ப்புள்ளது. வேர்வை வரும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

பயணம்
உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணம் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் மட்டும் மிக கவனமாக இருப்பது நல்லது. தாய் வழி உறவு, தந்தை வழி உறவு, உறவுகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. வேலை ஆட்கள், துணையிடம் சண்டை, தகராறு செய்வது, அவர்களை அவமானப்படுத்துவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் உங்களைவிட்டு விலகிச் செல்வதற்கான சூழல் ஏற்படும்.
கோபம் வேண்டாம்
எந்த உறவுகளாக இருந்தாலும் அரவணைத்துக் கொள்வது நல்லது. யார் எது சொன்னாலும் உங்களுடைய துணை உங்களை விட்டு விலகிச் செல்லவே மாட்டார்கள். உங்களுடைய அன்பு அவ்வளவு பரிசுத்தமாக இருக்கும். உங்களைச் சுற்றி சிறிய வட்டம் இருந்தாலும் உங்கள் மேல் அவ்வளவு அன்பாக இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். அதீத கோபம், ஆவேசப்படுவதை தவிர்ப்பது நல்லது.
தனவரவு
வண்டி வாகனங்கள் வாங்குவது, அசையும் அசையா பொருள்கள் வாங்குவது, ஆடை ஆபரணங்களை சேர்ப்பது, தன அமைப்பு உண்டாகும். தொழில் விஷயத்தில் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு குழந்தையை தத்தெடுக்கக்கூடிய பாக்கியம் உண்டு. அந்த குழந்தைகளுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து மகிழ்வீர்கள்.
தொழில்
புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். அந்த தொழிலில் பெரிய சாதனைகள் செய்வீர்கள். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பது, கோசாலை, பசுமாடுகள் வளர்ப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். அதில், அற்புதமான சந்தோஷங்களைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது.
பரிகாரம்
பெரிய வெற்றிகளும், சந்தோஷமும் ஏற்படும். இழுபறியாக இருந்த பலவிதமான கஷ்டங்கள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். உடற்பயிற்சி செய்வதை மட்டும் விட்டுவிடாமல் இருப்பது நல்லது. முதுகு தண்டுவடம், கழுத்து, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். திருச்செந்தூர் செல்வது மேன்மையைத் தரும். மாதம்தோறும் வியாழக்கிழமைகளில் மகான்கள் வழிபாடு செய்வது நல்லது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications