குரு, சுக்கிரன் அருளால் சிம்ம ராசிக்கு கொட்டும் பணம்.. அலுவலக விஷயங்களில் கவனம்
வார ராசி பலன்: ஆகஸ்ட் 10 முதல் 16 ஆம் தேதி வரையிலான ஆடி 26 முதல் ஆவணி 1 வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும்.
அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் 16 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம். வெளியூர், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வீர்கள். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வரும் நிலை ஏற்படும். அனைத்து விதமான பிரச்சனைகளும் உங்களை விட்டு நீங்கும். வெளியூர், வெளிநாடு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் இனி நடக்கும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள், பல் பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
குரு சுக்கிரன் அருள்
குரு, சுக்கிரன் இருவரும் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கின்றனர். காசு, பணம் தாரளாமாக இருக்கும். பணம், காசுக்கு எந்தவித குறையும் இருக்காது. வெளியூர், வெளிநாடு பயணங்கள் ஏற்படும். அயோத்தியா ராமபிரான் வழிபாடு அற்புதத்தை ஏற்படுத்தும். பொருளாதாரம், மகிழ்ச்சி ரீதியாக 75 சதவீதம் நன்மைகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.
கவனம்
மேலதிகாரிகள் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மனம் விட்டுப் பேசுவது நல்லது. தேவையற்ற யோசனை, மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. அரசுத் துறையில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள் கவனமாக இருப்பது நல்லது. தான் உண்டு, தன் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பது சிம்மத்திற்கு நன்மையான அமைப்பாகும். துணையிடம், காதலியிடம் மனம் விட்டுப் பேசுவது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.
வழிபாடு
நரம்பு, கண் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அனுமன் சாலிஷா கேட்பது, அனுமனை வழிபாடு செய்து, அன்னதானத்திற்கு மிளகு சீரகம் கல் உப்பு போன்றவற்றை வழங்குவது நல்லது.












Click it and Unblock the Notifications