திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா - ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி
திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா வாக்கியப்பஞ்சாங்கப்படி டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆன்லைனில் பதிவு செய்து அடையாள அட்டையை கொண்டு வருபவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
சென்னை: திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா வாக்கியப்பஞ்சாங்கப்படி டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பக்தர்கள் www.thirunallarutemple.org என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து அடையாள அட்டையை கொண்டு வருபவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப் பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு வரும் டிசம்பர் 27-ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் அர்ஜுன் சர்மா தலைமையில் ஆலய நிர்வாக அதிகாரி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் திருநள்ளாறு தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா கூறியதாவது வரும் டிசம்பர் 27-ஆம் தேதி அன்று நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி விழாவிற்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆன்லைன் மூலமாக பதிவு செய்து அடையாள அட்டையுடன் வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
உள்ளூர் மற்றும் வெளியூர் சேர்ந்த பக்தர்கள் www.thirunallarutemple.org என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து அடையாள அட்டையை கொண்டு வருபவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறிய ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா, சனிப்பெயர்ச்சி முந்தைய வாரம் முதல் சனிப்பெயர்ச்சி தொடர்ந்து 4 வாரம் என ஆறு வாரங்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் செய்து தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் வரும் பக்தர்கள் அனைவரும் வெப்பமானி பரிசோதனைக்கு பின்னரே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அறிகுறிகளுடன் வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா தெரிவித்தார்.
நளன் தீர்த்த குளத்தில் புனித நீராட அனுமதிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications