Dhanusu: தனுசு ராசிக்கு அதிர்ஷ்டக் கதவை தட்டும் 3 கிரகங்கள்.. "ஏ" கிளாஸ் யோகம்
Dhanusu Rasi Palan: மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.
அந்த வகையில், மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)
தனுசு ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு ஏ கிளாஸ் யோகம். 3 கிரகம் உங்கள் 7 ஆம் இடத்தைப் பார்க்கிறது. மற்றவர்களால் லாபம் உண்டாகும். நண்பர்களால், பார்ட்னரால் லாபம் ஏற்படும். தொழிலில் 10 மடங்கு மேன்மையைத் தரும். உழைப்பை போடத் தோன்றும். உடம்பில் வியர்வை வெளியேறும் காலகட்டம். டென்ஷன், கவலைகள் எல்லாம் நீங்கும்.
ஆரோக்கியம்
பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் பலமாக இருப்பதால் நிறைய அரசியல் செய்வீர்கள். உங்களைச் சுற்றி அரசியல் நடக்காது, பாக்கிய ஸ்தானத்தில் கேது இருப்பதால் கண்டிப்பாக இந்த காலகட்டத்தில் அடிவயிறு, கழிவுப் பாதை போகக்கூடிய பாதிப்புகள், நரம்பு பிரச்சனைகளில் கவனம் தேவை. குரு, சுக்கிரன் பார்வை இருப்பதால் நல்ல யோகமான காலகட்டமாக இருக்கும்.
ஏற்றம்
அற்புதமும், ஆனந்தமும் ஏற்படும். மன அழுத்தம் தீரும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளியிடத்திலும் காப்பாற்றுவீர்கள். எதிரிகள் விஷயத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். ராகவேந்திரர் வழிபாடு மன அழுத்தத்தை தீர்த்துக் கொடுக்கும். வண்டி வாங்குவது, வீடு வாங்குவது, நிலம் வாங்குவது போன்றவை ஏற்படும். பெண்களுக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். ரத்த பந்த உறவுகளுக்கு பெரிய அளவுக்கு ஏற்றம் ஏற்படும். தொழிலில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் தீரும்.
வழிபாடு
எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். கடன் தொல்லைகள் சிறிது அவதிகள் ஏற்படும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கபாலீஸ்வரர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீத நன்மைகள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications