சிம்மம், கன்னி ராசியினருக்கு 15 நாட்களில் வரப்போகும் அற்புத மாற்றம்.. முழு பலன்கள் இதோ
நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான மாதத்தின் முதல் பாதி சிம்மம் மற்றும் கன்னி ராசியினருக்கு எப்படி இருக்கும், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்காலம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றமானது 12 ராாசிக்காரர்களுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சிம்மம், கன்னி ராசியினருக்கு நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கிடைக்கும் பலன் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு தாய் வழி, தந்தை வழி உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். துணைக்கும், உங்களுக்கும் இருந்த மன வருத்தங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பழைய கடன்கள் அனைத்தும் தீரும் யோகம் உண்டாகும். சண்டை, சச்சரவுகள் நீங்கி அன்பு செலுத்தும் காலகட்டம் உண்டாகும். காது, மூக்கு, தொண்டை, சைனஸ், நரம்பு தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
அந்நியர் தலையீடு
தெய்வீக வழிபாடுகள், தெய்வ மார்க்க பயணங்களைச் செய்து மகிழ்வீர்கள். உறவு முறையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். குடும்பத்தில் பிறர் தலையிடுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. காதல் அமைப்பில் நண்பர்கள் தலையிடுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பதவி உயர்வு கிடைக்கும். இடமாற்றங்கள் வந்தால் அதனை எடுத்துக் கொள்வது நல்லது.
வாக்குவாதம்
பெற்றோர், பெரியோர் விஷயங்களில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அவர்கள் சொல்லக்கூடிய விஷயங்கள் உங்களுக்குப் பிடிக்காமல் போவதற்கான வாய்ப்புள்ளது. 4 ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாய் உறவுகளால் தொந்தரவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வண்டி, வாகனங்களை மாற்றி புதியதாக வாங்குவீர்கள்.
வழிபாடு
வேலைக்காரர்களால் இருந்து வந்த பாதிப்புகள் படிப்படியாக நீங்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். விஷ்ணு வழிபாடு, விஷ்ணு காயத்ரி மந்திரத்தை சொல்லி வருவது நன்மையையும், அனுகூலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். மறுமணத்திற்கான சரியான நேரம் வரும். எல்லா விஷயத்திலும் ஏற்றம் பெறுவீர்கள்.
பிரச்சனைகள் நீங்கும்
குடும்பத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். இளம் வயதினர், திருமணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இனி நன்மைகள் ஏற்படும். பெருமாள் வழிபாடு அற்புதமான அனுகூலத்தை தரும். தினந்தோறும் சுப்பிரபாதம் கேட்பது ஜெயத்தை ஏற்படுத்தும். தினந்தோறும் சுப்பிரபாதம் கேட்பது வெற்றியைக் கொடுக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடிய அமைப்பு ஏற்படும்.
சொத்து வாங்கும் யோகம்
பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும். வேற்று மொழி நாட்டில் அதிக செல்வாக்கு ஏற்படும். தொழில், வியாபாரம், படிப்பு, உத்தியோகத்தில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். காதல் அமைப்பு பெற்றோர், உறவினர், நண்பர்களால் ஏற்றுக் கொள்ளப்படும். நிலம், வீடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் கைகொடுக்கக் கூடிய அற்புதமான காலகட்டம். அலர்ஜி தொடர்பான விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications