Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sevvai peyarchi: தனுசு ராசியை சோதிக்கப் போகும் செவ்வாய்.. சாதகமா?.. பாதகமா?

Subscribe to Oneindia Tamil

செவ்வாய் பெயர்ச்சி: மிதுன ராசியில் இருக்கும் செவ்வாய் ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகாலை 1:56 மணிக்கு, கடக ராசிக்குள் பெயர்ச்சி ஆவார். இதனால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில், செவ்வாய் பெயர்ச்சியால் தனுசு ராசிக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கும். சாதகமா, பாதகமா என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசிகளை, இயக்கத்தை மாற்றுகின்றன. கிரகங்களின் இயக்க மாற்றம் மற்றும் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் தளபதி ஆகும். பூமியின் மகனான செவ்வாய் அக்னியுடன் தொடர்புடையவர்.

Sevvai peyarchi Dhanusu mars transit

படை, வீரம், தைரியம், செல்வம், நிலம், வீடு போன்றவற்றுக்கு காரணியானவர் செவ்வாய் கிரகம். இந்த கிரகம் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுவது வழக்கம். ஜோதிடத்தில் செவ்வாய் பெயர்ச்சி என்பது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. செவ்வாய் மிதுன ராசியில் தற்போது இருக்கிறார். ஏப்ரல் 3 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 1:56 மணிக்கு கடக ராசிக்குள் பெயர்ச்சியாகிறார்.

செவ்வாய் பெயர்ச்சியாவதால் சில ராசிக்காரர்கள் சுப பலன்களையும், சில ராசியினர் அசுப பலன்களையும் பெறுவர். அந்த வகையில், தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி என்னவிதமான பலன்களைக் கொடுக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

தனுசு ராசிக்காரர்களுக்கு 7 ஆம் வீட்டில் செவ்வாய் வருகிறார். இதனால், திருமணத் தடைகள் உண்டாகும். காதலிப்பவர்களுக்கு திருமணத்தில் முடியாமல் பாதியிலேயே நிற்கும். 7 ஆம் வீட்டில் செவ்வாய் வக்கிரம் பெறுவதால் இல்லற வாழ்வில் இன்பம் கொடுக்கும். புத்தி தடுமாறுவதற்கான வாய்ப்புள்ளது. தேவையில்லாத தொடர்புகள் உருவாக்கும். தம்பதிகளுக்குள் தேவையில்லாத சந்தேகங்கள் உண்டாகும். அவமானங்கள் ஏற்படும்.

7 என்பது விவகாரத்துக்கான இடம். கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சண்டைகளை பெரிய விஷயமாக்காமல் இருப்பது நல்லது. குறுக்கு வழியில் வெளிநாடு செல்ல முயற்சிப்பது, வெளிநாடு செல்ல பணம் கட்டுவது போன்றவற்றை தள்ளிவைப்பது நல்லது. இல்லையெனில் ஆபத்தில் சிக்கும் நிலை ஏற்படும்.

ஏழாம் வீட்டு செவ்வாய் பகவான் திருமண பிராப்தம் தடைபடும். தப்பு செய்கிறோம் என்பது தெரியாத அளவுக்கு தப்பு செய்யும் நிலை ஏற்படும். சம்பந்தமில்லாத விஷயங்களில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். குடும்பம், வேலை, பெண்கள் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+