Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ப்ராஜெக்ட் 52.. தமிழ்நாடு முழுக்க சீறிபாயும் சாலைகள்.. மத்திய அரசின் செம பிளான்.. எங்கெல்லாம் வருது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), நடப்பு நிதியாண்டில் நவம்பர் 14 வரை, 52 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஏலங்கள் கோரியுள்ளது. இந்தத் திட்டங்களின் மொத்த நீளம் 2188 கி.மீ. ஆகும். இதற்கான மூலதனச் செலவு ரூ. 1,15,447 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் முக்கியமான சில சாலை திட்டங்கள் கவனம் பெற்றுள்ளன.

இந்தத் திட்டங்கள் மூலம் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், 2025-26 நிதியாண்டில் 10,000 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்கும் இலக்கை அடைய உதவும். இதில் NHAI-யின் பங்களிப்பு சுமார் 45% முதல் 50% வரை இருக்கும்.

52 திட்டங்களில் 18 திட்டங்கள் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 15 திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, விரைவில் ஒப்புதல் பெறும் நிலையில் உள்ளன. ஆறு திட்டங்கள் ஒப்புதலுக்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மத்திய அரசின் சாலை திட்டங்கள்

இதுதவிர, 10 திட்டங்கள் மதிப்பீடு செய்வதற்காக நிலைக்குழுவுக்கு (SFC) அனுப்பப்பட்டுள்ளன. மூன்று திட்டங்களுக்கான முன்மொழிவுகள் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படும் நிலையில் உள்ளன.

52 National Highway Projects Open for Bids NHAI Reports Tamil Nadu to get major projects

NHAI, 2025-26 நிதியாண்டில் 4500 கி.மீ. திட்டங்களுக்கு ஒப்பந்தம் வழங்கவும், நடப்பு நிதியாண்டில் 5000 கி.மீ. சாலைகளைக் கட்டவும் உள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை, 504.315 கி.மீ. நீளமுள்ள 43 திட்டங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2060.986 கி.மீ. சாலைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் இறுதி வரை 3200 கி.மீ. சாலைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 3800 கி.மீ. ஆக இருந்தது. இந்த ஆண்டு 10,000 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுமான இலக்கை எட்டுவோம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள மொத்த தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுமானத்தில் NHAI-யின் பங்கு 45% முதல் 50% வரை உள்ளது. மீதமுள்ள 50% தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (NHIDCL), MoRTH, எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) மற்றும் மாநில பொதுப்பணித் துறைகள் (PWD) மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

நடப்பு ஆண்டின் முதல் பாதியில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டுமானப் பணிகள் சற்று மந்தமடைந்தன. தரமான மற்றும் சரியான நேரத்தில் கட்டுமானத்தை உறுதி செய்வதற்கான செயல்முறைகளைச் சீரமைப்பதில் அமைச்சகம் கவனம் செலுத்தியதே இதற்குக் காரணம். இந்தக் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதால், திட்ட ஒதுக்கீடு மற்றும் கட்டுமானப் பணிகள் இரண்டாவது பாதியில் வேகம் பிடிக்கும் என அமைச்சகம் எதிர்பார்க்கிறது.

2025-26 நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டுமானம் 9,000-10,000 கி.மீ. ஆக இருக்கும். இது 2024-25 நிதியாண்டில் மதிப்பிடப்பட்ட 10,500-11,500 கி.மீ., 2023-24 இல் 12,349 கி.மீ., 2022-23 இல் 10,331 கி.மீ., மற்றும் 2021-22 இல் 10,457 கி.மீ. உடன் ஒப்பிடுகையில் சற்றுக் குறைவு.

தமிழ்நாட்டில் சில திட்டங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான சாலைப்பகுதி நான்கு வழி சாலையாக மாற்றப்பட உள்ளது. 40 கி.மீ முதல் 55கி.மீ வரையிலான தூரத்தைக் கொண்டது ஆகும் இந்த சாலை.

திலிப் பில்ட்கான் நிறுவனம் இந்த சாலையை அமைக்க ஒப்பந்தம் பெற்றுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (NHAI) புதிய நெடுஞ்சாலைத் திட்டத்திற்கான டெண்டரில் 'L-1 ஏலதாரராக' அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் பங்குச் சந்தையில் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான இந்தச் சாலைப்பகுதி, 80.360 கி.மீ முதல் 127.025 கி.மீ வரையிலான தூரத்தைக் கொண்டது. ஜிஎஸ்டி நீங்கலாக, இத்திட்டத்தின் ஒப்பந்த மதிப்பு ரூ. 879.30 கோடியாகும். மொத்தம் 46.47 கி.மீ தூரத்திற்கு அமையும் இத்திட்டம், ஹைப்ரிட் அன்யூட்டி மோட் (HAM) முறையில் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 24 மாதங்களில் நிறைவுபெறும். அதன் பிறகு, வணிகச் செயல்பாட்டுத் தேதியிலிருந்து 15 ஆண்டுகளுக்குச் சாலை பராமரிப்பு மற்றும் மேலாண்மை மேற்கொள்ளப்படும்.

அதேபோல் பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையேயான நான்கு வழிச்சாலை பணிகள் 95% நிறைவடைந்துள்ள நிலையில், இந்தச் சாலை டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழையால் எந்த தாமதமும் ஏற்படாத பட்சத்தில், எஞ்சிய பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

முக்கிய பாலங்கள் மற்றும் மேம்பாலங்களுக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆச்சிபட்டி அருகே 2,166 மீட்டர் நீளத்திற்கு சாலைகள் மற்றும் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையேயான நான்கு வழிச்சாலை

தற்போது ஆச்சிபட்டி, புளியம்பட்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் சாலைகளில் பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. புளியம்பட்டி, ஊஞ்சவேலம்பட்டி உள்ளிட்ட இடங்களில் சுவர்கள் கட்டும் போன்ற இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

3,649 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகும் இந்த திட்டம், பொள்ளாச்சியையும் திண்டுக்கல் அருகே உள்ள கமலாபுரத்தையும் இணைக்கும். 131.96 கி.மீ நீளமுள்ள இந்த சாலை மடத்துக்குளம் மற்றும் ஒட்டன்சத்திரம் வழியாகச் செல்லும். இத்திட்டம், அப்பகுதியின் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதோடு, போக்குவரத்துக் குறைப்புக்கும் வழிவகுக்கும்.

மேலும் பெங்களூர் -சென்னை விரைவுச்சாலை திட்டத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதூர் வரை அமையவுள்ள 23.2 கி.மீ. நீள உயர்மட்டச் சாலைக்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தொடங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக, மதுரவாயல் முதல் பூந்தமல்லி வரையிலான ஆறு வழி உயர்மட்டச் சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

மதுரவாயலில் அமைக்கப்படும் இரட்டை அடுக்கு கிளாஸ்ஃபளை அமைப்பு, நாட்டின் முதல் முயற்சியாகும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்தின் முதல் கட்டம், மதுரவாயல் கிளாஸ்ஃபளை பரிமாற்றம் முதல் பூந்தமல்லிக்கு அருகிலுள்ள சென்னை வெளிவட்டச் சாலை வரையிலான 8.14 கி.மீ. தூரத்தை உள்ளடக்கியது. இதில் NH-48 சந்திப்பிற்கான மேம்பாடுகளும் அடங்கும்.

சென்னை வெளிவட்டச் சாலை

இந்த உயர்மட்டச் சாலைப் பணிகள், கலப்பின வருடாந்திர மாதிரி திட்டத்தின் கீழ் ரூ.1,241 கோடி செலவில் செயல்படுத்தப்படும். மதுரவாயல், பூந்தமல்லி, இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய நான்கு இடங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரவாயலில் அமையும் இரண்டு அடுக்கு கிளாஸ்ஃபளை, நாட்டின் முதல் முறையாகும். இது கட்டுமானத்தில் உள்ள துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட விரைவுச்சாலையிலிருந்து சென்னை துறைமுகம் நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+