Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபரேஷன் சக்ஸஸ்.. இந்தியாவிலேயே முதல்முறை.. சென்னையில் நடந்த தரமான சம்பவம்.. சாதிச்சிட்டாங்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 3.2 கிலோமீட்டர் நீளமுள்ள தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை நான்கு வழி மேம்பால திட்டத்தின் முதல் இரும்பு பாலப்பகுதியை வெற்றிகரமாக நிறுவி உள்ளன. பாலத்தின் ஒரு பகுதி வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

சென்னை, தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை இடையே கட்டப்படும் உயர்மட்டச் சாலை, தமிழ்நாட்டின் மிகவும் செலவு மிக்க மேம்பாலத் திட்டமாக உருவாகி வருகிறது. தற்போது 50% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அண்ணா சாலையில் உருவாகும் இந்த உயர்மட்டச் சாலை, சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

automobile chennai

தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை உயர்மட்ட சாலை

சுமார் 3.2 கிலோமீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச் சாலையாக அமையும் இந்த மேம்பாலம், கீழே உள்ள மெட்ரோ சுரங்கப்பாதைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பொறியியல் அதிசயமாகக் கருதப்படுகிறது. மெட்ரோ சுரங்கப்பாதையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சிறப்புத் திட்டமிடலுடன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த 'இன்ஜினியரிங் அதிசயம்' நிறைவுற்றதும், தேனாம்பேட்டைக்கும் சைதாப்பேட்டைக்கும் இடையே பயண நேரம் 10 நிமிடங்களுக்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அண்ணா சாலையில் வாகன நெரிசல் காரணமாக நீண்ட நேரம் ஆகும் இந்த பயணம், மேம்பாலம் திறக்கப்பட்ட பின் மிக விரைவாக நிறைவடையும்.

அண்ணா சாலையில் உயர்மட்டச் சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எதிர்பார்த்ததை விட வேகமான முன்னேற்றத்தைக் காண முடிகிறது. கான்கிரீட் தூண்களுக்குப் பதிலாக இரும்புத் தூண்கள் பயன்படுத்தப்படுவதால், தூண்கள் எழுப்பும் பணி விரைவாக முடிவடைந்துள்ளன. இது திட்டத்தை மேலும் விரைந்து முடிக்க உதவும்.

தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை மெட்ரோ சுரங்கத்திற்கு மேலே சாலை

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான இந்த உயர்மட்டச் சாலையின் சிறப்பம்சங்கள் பல உள்ளன. சுமார் 3.2 கி.மீ. நீளமுள்ள இந்த நான்கு வழி மேம்பாலம், நாட்டின் முதல் மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேலே கட்டப்படும் உயர்மட்டச் சாலை என்ற பெருமையைப் பெறுகிறது. இதன் மொத்த கட்டுமானச் செலவு ₹621 கோடியாக உள்ளது. ஒரு கிலோமீட்டருக்கான சராசரி செலவு ₹195 கோடி.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இதே காலகட்டத்தில், ஒரு கிலோமீட்டருக்கு ₹120 முதல் ₹130 கோடி செலவில் ஆறு வழி உயர்மட்டச் சாலைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாநில நெடுஞ்சாலைத் துறையின் இந்த தேனாம்பேட்டை உயர்மட்டச் சாலைத் திட்டம், NHAI திட்டங்களை விட சுமார் 50% அதிக செலவைக் கொண்டிருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேலே மற்றும் நகரத்தின் மையப் பகுதியில் கட்டப்படுவதால் இந்த கூடுதல் செலவு ஏற்படுகிறது.

இந்த மேம்பாலத்திற்கான அடித்தளம் சாலை மட்டத்திலிருந்து ஏழு மீட்டர் ஆழத்தில் அமைக்கப்படும். மேலும், இது சராசரியாக 20-28 மீட்டர் ஆழம் கொண்ட மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேலே அமையும். இந்தியாவின் முதல்முறையாக, நிலத்தடி மெட்ரோ சுரங்கப்பாதை கொண்ட சாலையில் இந்த உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது.

https://x.com/chennai_Highway

முக்கிய சந்திப்புகளுடன் இணைக்கப்படும் சாலை

இந்த மேம்பாலம் வழியில் உள்ள முக்கிய சந்திப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள பேருந்து வழித்தடச் சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) தலைமைப் பொது மேலாளர், சுரங்கப்பாதையில் கட்டுமானக் கழிவுகள் வெளியேறாமல் இருப்பதை கண்காணிப்பது உட்பட பல விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் வகுத்துள்ளார்.

CMRL, மெட்ரோ நிலத்தடி கட்டமைப்புகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ₹500 கோடி காப்பீடு கோரி ஒப்பந்தம் செய்துள்ளது. ₹621 கோடி மதிப்பில் 3.5 கி.மீ. தொலைவு புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால், நந்தனம் சிக்னலில் நிற்க வேண்டிய அவசியமிருக்காது.

அண்ணா சாலையில் பயணம் செய்பவர்கள் இனி நந்தனம் சிக்னல் உள்ளிட்ட ஐந்து சிக்னல்களில் நிற்க வேண்டியதில்லை. மேம்பாலத்தில் பயணித்தால் அதிகபட்சம் ஐந்து நிமிடங்களுக்குள் கடந்துவிடலாம். அதே நேரத்தில், கீழே உள்ள சாலையில் பயணித்தால் குறைந்தது 15 நிமிடங்கள் ஆகும், உச்ச நேரங்களில் இது இன்னும் அதிகமாகும்.

தி.நகர் செல்பவர்கள் கீழ் சாலையை பயன்படுத்தும்போது, பாலத்தின் மேலே போக்குவரத்து நெரிசல் குறையும். பெங்களூரின் எலக்ட்ரானிக் சிட்டி பாலம், கொல்கத்தாவின் மா பாலம் போன்ற நீண்ட பாலங்கள் இல்லை என்ற சென்னையின் குறை இந்த திட்டம் மூலம் நிவர்த்தியாகும்.

மாநில அரசு நிர்வாக ஒப்புதல் அளித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மாநில நெடுஞ்சாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சமீபத்தில் ஏலம் கோரியது. இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த பட்ஜெட் ₹525 கோடி. இது சராசரியாக ஒரு கி.மீட்டருக்கு ₹164 கோடி செலவாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+