சொகுசு + ஸ்டைல்.. 3ம் தலைமுறைக்கான Honda Amaze கார் எப்படி இருக்கு? ஹோண்டாவின் புதிய அறிமுகம்
டெல்லி: இந்தியாவில் பிரீமியம் கார்களை தயாரிப்பதில் முன்னணியில் உள்ள ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் பொதுமக்கள் மிகவும் எதிர்பார்த்த புத்தம் புதிய 3ம் தலைமுறை Honda Amaze-ஸை அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவில் புதிய தலைமுறை Amazeஸின் உலகளாவிய அறிமுகத்தை குறிக்கிறது. இது உலகளவில் ஹோண்டாவின் முக்கிய சந்தை மற்றும் புதிய மாடலை அறிமுயகப்படுத்திய முதல் நாடாக இந்தியாவின் பெயரை இடம் பெற வைத்துள்ளது.
ஸ்டைலனா மற்றும் பிரீமியம் காம்பாக்ட் செடானான இது, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் முன்னேற விரும்பும் இளைஞர்கள் மற்றும் குடும்பம் சார்ந்த பயனர்களின் விரப்பங்களை பூர்த்தி செய்யும் ஒரு OutClass மற்றும் மகிழ்ச்சியான செடான் அனுபுவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்து.

புதிய Amaze ஆனது தய்லாந்தில் அமைந்துள்ள Honda R & D ஆசியா பசிபிக் மையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது ‛எலைட் பூஸ்டர் செடான’ என்ற பிராமண்டமான கருத்தின் கீழ், பயனர்கள் தங்கள் வெற்றி மற்றும் நவீனத்தை வெளிப்படுத்தவும், அவர்களின் சாதனைகளில் பெருமிதம் கொள்ளவும், உயர்ந்த சமூக அந்தஸ்தின் நம்பிக்கையை வெளிப்படுத்தவும் உதவும் ஹோண்டாவின் பார்வையை பிரதிபலிக்கிறது.
அதன் திடமான 3-பெட்டி வடிவமைப்புடன் Amaze ஒரு உண்மையான செடான் வடிவத்தை வழங்குகிறது. இது 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட உயர் வகுப்பை பிரதிபலிக்கிறது. இது ‛முற்போக்கனது’ மற்றும் ‛கிளாஸி’ என்ற முக்கிய கூறுகளை உள்ளடக்கிறது. அதன் ஸ்போர்ட்டி வெளிப்புற வடிவமைப்பு, அதிநவீன மற்றும் விசாலமான உட்புறம், மேம்பட்ட பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் அம்சங்களில் இருந்து மனஅமைதி மற்றும் வசதியான நம்பகமான சவாரி ஆகியவற்றுடன் OUTCLASS பிரிமீயம் அனுபவத்தை வழங்குகிறது.
பாதுகாப்பிற்கான ஹோண்டாவின் அர்ப்பணிப்பு மற்றும் 2050ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தபப்ட்டதில் இருந்து, நாடு முழுவதும் பரவியுள்ள 5.8 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று காம்பாக்ட் செடான் பிரிவில் ஹோண்டாவின் வலிமையை நிரூபித்துள்ளது.
புதிய Amaze பற்றி பேசி, ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டகுயா சுமுரா, ‛‛புதிய Amazeஸை அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது ஸ்டைலிங், பாதுகாப்பு, இணைப்பு, டிரைவ் மற்றும் சொகுச ஆகிய அனைத்து அளவுருக்களிலும் சிறந்து விளங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. Amaze எப்போதும் இந்திய வாடிக்கையாளர்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தை பிடித்துள்ளது.
மேலும் இந்த புதிய தலைமுறை மாடல் ்வர்களின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி யெ்வதில் எங்களி்ன அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இந்த புதிய Amaze புதிய தரங்களை அமைக்கும் மற்றும் இந்தியாவில் ஹோண்டோவின் பாரம்பரியத்தை தொடர்ந்து வலுப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பிரிவில் முதன் முறையாக எங்களின் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் ஓட்டுனர் உதவி தொில்நுட்ங்களின் தொகுப்பான Honda SENSINGஐ Amazeஸூக்கு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த அப்ளிகேஷன் மூலம் இபு்போது எங்களின் இந்தியாவின் அனைத்து மாடல்களிலும் ADAS தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். மேலும் Honda Amaze இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் ADAS இயக்கப்பட்ட முதல் கார் ஆகும்’’என்றார். மேலும் தொடர்புக்கு ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் சபா கான் ([email protected]), விவேக் ஆனந்த் சிங் ([email protected]), பெர்ஃபெக்ட் ரிலேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தீரஜ் ராய் ([email protected]), அன்தரா சென் குப்தா ([email protected]) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications