Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி தேசிய நெடுஞ்சாலைகளில் "சிங்கிள் லேன்" இருக்காது! மொத்தமாக நீக்க முடிவு! வாகன ஓட்டிகளுக்கு கிப்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் தற்போதுள்ள அனைத்து ஒற்றை வழி தேசிய நெடுஞ்சாலைகளும் இரட்டைப் பாதைகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் எதிர்காலத்தில் தேசிய நெடுஞ்சாலை நடைபாதை லேன்களுடன் கூடிய இரண்டு பாதைகள் இருப்பது கட்டாயமாக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான விதிகளில் புதிய விதிமுறைகள் வரையறுக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No more single lane Highway will be there after this year National Highway department announces

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் செயலாளரான அனுராக் ஜெயின் கருத்துப்படி, நாட்டின் நெடுஞ்சாலை நெட்வொர்க் மொத்தமாக மாற உள்ளது. நாடு முழுக்க 9,500 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய சாலை திட்டங்களின் கட்டுமானத்தை முடிக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி நடப்பு நிதியாண்டில் நெடுஞ்சாலை கட்டுமான இலக்கை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, இந்த ஆண்டு தொடக்கத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட 12,500 கிலோமீட்டருக்கு பதிலாக சுமார் 14,000 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

நெடுஞ்சாலை கட்டுமான பணிகள் நாளொன்றுக்கு 11.6 கிலோமீட்டரில் இருந்து தற்போது 30 கிலோமீட்டராக உயர்ந்துள்ளதாகவும், மேலும் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 2020-21 ஆம் ஆண்டில், ஒரு நாளைக்கு 37 கிமீ என்ற வேகத்தில் மொத்தமாக 13,327 கிமீ நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டன. 38 கிமீ/நாள் சாலைகள் அமைக்கப்படும் என்று நடப்பு நிதியாண்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) இலக்கு 6,000 கி.மீ ஆக உயர்த்தப்படலாம், இது போக, வடகிழக்கு மற்றும் சர்வதேச எல்லைகளில் நெடுஞ்சாலைகளை அமைக்க 1,500-2,000 கி.மீ. இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

எக்ஸ்பிரஸ் வே சாலைகள்: விரைவு சாலைகள் : விரைவு சாலைகள் இந்தியாவின் மிக உயர்ந்த சாலைகள் ஆகும். ஜூலை 2023 நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 5,173 கிமீ (3,214 மைல்) அதிவேக நெடுஞ்சாலைகள் அதாவது எக்ஸ்பிரஸ் வே உள்ளன. இவை பெரும்பாலும் 6, வழி அல்லது 8 வழி சாலைகள் ஆகும்.

இங்கே அதிகபட்சம் 120 கிமீ வேகத்தில் கூட செல்ல முடியும். கட்டுமானத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலை இந்தியாவின் மிக நீளமான விரைவுச்சாலையாக இருக்கும். இது 2026 இறுதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே இந்தியாவில் 2002 இல் தொடங்கப்பட்ட முதல் 6-வழி செயல்பாட்டு விரைவுச்சாலை ஆகும். தற்போது, ​​இந்தியாவின் மிக நீளமான எக்ஸ்பிரஸ்வே, மும்பை-நாக்பூர் எக்ஸ்பிரஸ்வே (கட்டம்-II) 600 கிமீ (370 மைல்), 2022 இல் திறக்கப்பட்டது மற்றும் (கட்டம்-II) மே 2023 இல் திறக்கப்பட்டது. மற்றும் 2021 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட 14 பாதைகள் கொண்ட டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ்வேயின் டெல்லி - தஸ்னா (யுபி எல்லை) பிரிவில் அகலமான விரைவுச்சாலையாக உள்ளது.

எக்ஸ்பிரஸ்வேக்கள்: ஜூலை 2023 நிலவரப்படி, 5,173 கிமீ (3,214.4 மைல்) நீளம் கொண்ட 48 எக்ஸ்பிரஸ்வேக்கள் இந்தியாவில் செயல்படுகின்றன, மேலும் 8,772 கிமீ கட்டுமானத்தில் உள்ளன. 2014 ஆம் ஆண்டில், நாட்டில் சுமார் 1,021 கிமீ அதிவேக நெடுஞ்சாலைகள் மட்டுமே இருந்தன.

நிதியாண்டில் 13,814 கிமீ நெடுஞ்சாலைகளை அமைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது மற்றும் இந்த ஆண்டு ஜனவரி வரை 7,685 கிமீ அளவை எட்டியுள்ளது. 7,685 கிமீ என்பது நான்கு வழிகளில் அமைக்கப்பட்ட தூரத்தின் அளவு ஆகும். ஒட்டுமொத்த அளவில், இந்த ஆண்டு கட்டுமானம் 12,500 கிமீ முதல் 13,000 கிமீ வரை எட்ட வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+