விடிவெள்ளி.. சென்னையின் நுழைவு வாயிலில்.. நடக்கும் தரமான மாற்றம்.. அடித்து தூக்கும் மத்திய அரசு!
சென்னை: சென்னை துறைமுகத்தைச் சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக, சென்னை துறைமுகப் பொறுப்பகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் மாநில அரசுடன் இணைந்து சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட விரைவுச் சாலையின் நுழைவுப் பகுதியில் சரக்கு வாகன நிறுத்துமிடத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த நான்கு வழித்தட இரட்டை அடுக்கு மேம்பாலமானது, 20.6 கி.மீ நீளம் கொண்டது. இது துறைமுகத்தையும், நகரின் மேற்கு புறநகர்ப் பகுதிகளையும் இணைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. துறைமுகத்தின் நுழைவாயில்களை வாகனங்கள் மறிக்காத வகையில், சுங்க மற்றும் டெர்மினல் அனுமதிகளுக்காக காத்திருக்க இந்த பிரத்யேக சரக்கு வாகன நிறுத்துமிடம் உதவும்.
நான்கு வழித்தட இரட்டை அடுக்கு மேம்பாலம்
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "TIDCO-வின் நிர்வாக இயக்குநர் தலைமையில் மே 2024-ல் நடந்த கூட்டத்தில் 10 ஏக்கர் நிலம் கேட்டு முறையான கோரிக்கை வைக்கப்பட்டது" என்றார். மேலும், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அதிகாரிகள் ஜூலை மாதம் ஆய்வு செய்ததில், அடையாளம்பட்டு வருவாய் கிராமத்தில் இதற்கான இடம் கண்டறியப்பட்டது.

துறைமுகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மே மாதம் நடத்திய ஆய்வில், 8.5 மற்றும் 3.5 ஏக்கர் அளவிலான இரண்டு நிலங்கள் இந்த வசதிக்காக பொருத்தமானதாக கண்டறியப்பட்டன. அடையாளம் காணப்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணைய நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற மாநில அரசின் உதவி கோரப்பட்டுள்ளது. மேலும், சென்னை துறைமுகம், எம்.எஃப்.எல் சந்திப்பு அருகே உள்ள தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை இரண்டாவது நுழைவு வாயிலாக ஒதுக்கீடு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் 21 கிலோமீட்டர் தூரத்திற்கு துறைமுகம்-மதுரவாயல் இடையே இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கும் பணி தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. 20 வருடங்களுக்கும் மேலாக முடங்கி கிடந்த பணிகள் தற்போது மிக தீவிரமாக நடந்து வருகிறது. எதிர்பார்த்ததை விட வேகமாக இதன் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டம் குறித்து சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
துறைமுகம் - மதுரவாயல் சாலைத் திட்டத்தின் விவரங்கள்
இந்த முக்கியமான திட்டத்தின் கீழ், இரண்டு அடுக்கு மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. இவை துறைமுகம் மற்றும் மதுரவாயலை இணைக்கும் வகையில் அமையவுள்ளன. இந்த சாலைப் பணிகள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம், துறைமுகத்தில் இருந்து சரக்குகளை எடுத்துச் செல்வதும், கொண்டு வருவதும் எளிதாக இருக்கும். இதன் மூலம், சரக்கு போக்குவரத்து நேரம் கணிசமாகக் குறையும். மேலும், நகரின் போக்குவரத்து நெரிசலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேகம் எடுத்த பணிகள்
தற்போது இந்த பணிகள் வேகம் எடுத்துள்ளன. இந்த திட்டத்திற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. ஒப்பந்ததாரர்கள், திட்டத்தை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இதன் காரணமாக, பொதுமக்கள் விரைவில் இந்த சாலையைப் பயன்படுத்த முடியும். இந்த சாலை அமைப்பதற்கான திட்டத்தில், பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சாலையின் தரம் உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம், நீண்ட காலத்திற்கு சாலைகள் நீடித்து உழைக்கும்.
இது சென்னை மாநகரத்தின் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். இந்த உயர்மட்ட சாலை, நகரின் வளர்ச்சிக்கு உதவும். மேலும், பொருளாதார மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும். முக்கியமாக இந்த பாதியில் சென்னையின் முதல் கம்பிவழி பாலம் (Cable-stayed bridge) விரைவில் கட்டப்பட உள்ளது. சென்னை துறைமுகம் - மதுரவாயல் திட்டத்தின் ஒரு பகுதியாக நேப்பியர் பாலம் அருகே இது அமையவுள்ளது. சென்னையில் மொத்தம் 3 இடங்களில் இந்த பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications