இதெல்லாம் ஒரு ரோடு! இதுக்கு டோல் கேட் வேறயா? தேசிய நெடுஞ்சாலை மெத்தனம்.. சென்னை -பெங்களூர் ஹைவே ஷாக்
சென்னை: சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலைகள் இருக்கும் நிலை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
சென்னை பெங்களூர் இடையே தற்போது எக்ஸ்பிரஸ்வே கட்டப்பட்டு வருகிறது. இதனால் தற்போது ஏற்கனவே உள்ள சாதாரண தேசிய நெடுஞ்சாலை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்த நெடுஞ்சாலையும் மிக மோசமான நிலையில் உள்ளது.

முக்கியமாக காஞ்சிபுரம் வழியாக செல்லும் மொத்த ஸ்ட்ரெட்ச் மிக மோசமான நிலையில் உள்ளன. ஸ்ரீபெரும்பத்தூர் உள்ளே செல்லும் சாலைகளும் மிக மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இங்கே பல மோட்டார் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் இருந்தும் கூட இதுதான் நிலை.
தேசிய நெடுஞ்சாலை துறை இதை சரி செய்வதற்கான எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவே இல்லை. ஆனால் மெயிட்டெயின் செய்யாத சாலைக்கு பராமரிப்பு பணி என்று டோல் கேட்டில் பணம் மட்டும் வாங்கிக்கொள்கிறார்கள்.
எக்ஸ்பிரஸ் வே: சென்னை பெங்களூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் வே சாலை பணிகள் நடந்து வருகின்றன. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.
பாலங்கள்: சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும். இந்த பகுதியை இப்போது கடக்க 30 நிமிடம் குறைந்தபட்சம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம்
இடை இடையே மக்கள் வெளியேற, உள்ளே வர இணைப்பு பாலங்கள் அமைக்கப்படும். 6 வழி சாலை கொண்ட மிக பிரம்மாண்ட பாலம் ஆகும். இதற்கான முழு ரிப்போர்ட் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. . இந்த சாலையில் சூப்பர் வீடியோ இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதன்பின் இதற்கான டெண்டர் விடப்படும். இந்த வருட இறுதிக்குள் இதற்கான பணிகள் தொடங்கும். சென்னை - பெங்களூர் செல்ல தற்போது பயன்படுத்தப்படும் ஹைவேஸின் மேல் இந்த பாலம் கட்டப்படும். நடுவில் ஒரு பில்லர் வைத்து மெட்ரோ பாணியில் இந்த பாலம் அமைக்கப்படும்.
இரண்டு கட்டங்களாக இந்த பாலம் அமைக்கப்படும். ஒன்று மதுரவாயலில் இருந்து சென்னை வெளிவட்ட சாலை வரை அமைக்கப்படும். மற்றொன்று அந்த இடத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை அமைக்கப்படும். இந்த புதிய பாலம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிக்கு முன்னால் நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications