தமிழ்நாட்டில் 2 பெரிய நகரங்களை இணைக்க.. புது 4 வே நெடுஞ்சாலை.. எங்கேன்னு தெரிஞ்சா.. ஆடி போயிடுவீங்க
சென்னை: தமிழ்நாட்டில் 4 வழி சாலைகள் மற்றும் 6 வழி சாலைகளில் தேவைகள் அதிகரித்து வருகின்றன. இந்த சாலைகளுக்கான தேவைகள் அதிகரிக்கும் நிலையில்தான்.. தமிழ்நாட்டில் இரண்டு பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய 4 வழி சாலை அமைக்கும் திட்டம் போடப்பட்டு உள்ளது.
அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான டிபிஆர் தயாரிக்கும் பணிகள் விரைவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதற்கான டெண்டர் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகாசி, அருப்புக்கோட்டை, பார்த்திபனூர் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சாலையானது தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று நெடுஞ்சாலை துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தமிழ்நாடு வந்த நிலையில்தான்.. இதன் மீதான கவனம் அதிகரித்துள்ளது. ஆனால் இதில் முழுக்க முழுக்க மாநில அரசு மட்டுமே நிதி செலவிட்டு சாலை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவை மதுரை வழியாக செல்ல வேண்டிய தேவையை தவிர்த்து ராமேஸ்வரத்திற்கு நேரடியாக செல்ல முடியும். இதனால் 2 மணி நேரம் பயண நேரம் குறையும்.
தற்போது, மதுரை வழியாக செல்லும் கொச்சி - தனுஷ்கோடி சாலைதான்.. மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை. பல லட்சம் பேர் செல்லும் இந்த சாலைதான் ராமேஸ்வரம் செல்லும் முக்கிய பாதையாக உள்ளது. மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையாக உள்ள இந்த ரோடு தற்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக திணறி வருகிறது. பரமக்குடியில் இருந்து ராமேஸ்வரம் வரை இரண்டு வழிச்சாலையாக குறுகி உள்ளது. இதனால் அங்கே வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்டு வருகின்றன.
இது மட்டுமின்றி தற்போது விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் வசிப்பவர்கள் கொச்சி-தனுஷ்கோடி சாலையில் ராமேஸ்வரம் செல்லும் முன் மதுரைக்கு செல்ல வேண்டும். மதுரை வழியாகவே அவர்கள் ராமேஸ்வரம் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, பார்த்திபனூர், பரமக்குடி வழியாக செல்வதாக இருந்தாலும் அது குறுகிய சாலை. இதை தடுக்கவே . சிவகாசி, அருப்புக்கோட்டை, பார்த்திபனூர் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 4 வழி சாலைகள் மற்றும் 6 வழி சாலைகளில் தேவைகள் அதிகரித்து வருகின்றன. இந்த சாலைகளுக்கான தேவைகள் அதிகரிக்கும் நிலையில்தான் இந்த அறிவிப்பு மக்களுக்கு வரப்பிரசாதமாக வந்து உள்ளது. இதனால் மதுரை செல்லாமல் ராமேஸ்வரம் செல்ல முடியும்.
இதனால் SH42 வழியை நான்கு-வழி நெடுஞ்சாலையாக விரிவுபடுத்துவதை இந்த திட்டம் முதன்மையாக கொண்டு உள்ளது. இதில் முழுக்க முழுக்க மாநில அரசு மட்டுமே நிதி செலவிட்டு சாலை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. தேவையான இடங்களில் உயர்மட்ட சாலைகள் அமைக்கப்படும். அதேபோல் சில இடங்களில் சர்வீஸ் ரோடும் அமைக்கப்படும் இதனால் 2 மணி நேரம் பயண நேரம் குறையும்.
-
20 நாள் பொறுமையா இருந்தா ரூ.70 லட்சம் தள்ளுபடி கிடைக்கும்..!! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
ஒலா-வுக்கு வேட்டு வைக்க வரும் வின்பாஸ்ட்? 200 ஏக்கர் தூத்துக்குடி பேக்டரியில் ரெடியாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications