மத்திய அரசு சரி வரல! இறங்கி அடித்த தமிழக அரசு! டெல்லி செய்ய வேண்டிய வேலையை.. தமிழ்நாடு அரசே செய்யும்
சென்னை: டெல்லியில் இருந்து மத்திய நெடுஞ்சாலை துறை செய்ய வேண்டிய முக்கியமான வேலை ஒன்றை தமிழ்நாடு அரசே செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை தீவிரமாக முன்னெடுக்க முடிவு எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் மத்திய நெடுஞ்சாலை துறையின் சாலை பணிகள் தாமதம் ஆகி வருகின்றன. முக்கியமாக 4 வழி சாலைகள் மிக தாமதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசு மூலம் ஏற்படுத்தப்படும் காலதாமதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து பணிகளை விரைவுபடுத்தும் வகையில் தமிழ்நாடு அரசே நான்கு வழி சாலைகளை அமைக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி தூத்துக்குடி-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை, ராமநாதபுரம்-ராமேஸ்வரம்-தனுஷ்கோடி, கோவை-சத்தியமங்கலம் ஆகிய மூன்று முக்கிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிச்சாலையாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் நெடுஞ்சாலை பிரிவு எடுத்துள்ளது. NHAI பல சிறிய திட்டங்களை மேற்கொள்ள முடியாமல் அதை தமிழக அரசுக்கு கை மாற்றியுள்ளது.
20 மாநகராட்சிகள் மற்றும் 100 நகராட்சிகளை உள்ளடக்கிய மொத்தம் 11,872 கிமீ நீளமுள்ள சாலைகள் 2026-ஆம் ஆண்டுக்குள் மீண்டும் அமைக்கப்படும். கலைஞர் நகரபுர சாலை மேம்பட்டுத் திட்டத்தில் தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் மொத்தம் 9,346 கிமீ சாலைகள் மீண்டும் அமைக்கப்படும். திட்டம், மாநில மற்றும் மத்திய நிதிக் கமிஷன் நிதி மற்றும் 2,526 கிமீ சாலைகள் சிறப்பு மாநில அரசின் நிதியைப் பயன்படுத்தி மீண்டும் அமைக்கப்படும்.
புதிய விங்; சென்னை உட்பட தமிழ்நாடு முழுக்க போடப்படும் சாலைகளை ஆய்வு செய்ய புதிதாக விங் ஒன்றை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தற்போது தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆய்வு பணிகள் செய்யப்படுகின்றன. இனி இந்த பணிகளை தமிழ்நாடு அரசே செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்காக தனியாக அரசு சார்பாக புதிய விங் உருவாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நகரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் சுமார் 10% உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்காக தோண்டப்பட உள்ளது. மார்ச் 20ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட இப்பணி, நகரின் பல்வேறு பகுதிகளில் ஒரு மாதத்துக்கும் மேலாக தொடரும். லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன், 1,188 கூடுதல் சாலைகளை மறுசீரமைக்கும் பணியை, குடிமை அமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. இப்பணி, ஒன்றரை மாதங்களுக்கு தொடரும். 2023-24ல் அடையாளம் காணப்பட்ட சாலைகளை 15 நாட்களில் மறுசீரமைப்போம். சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட சாலைகள் ஏப்ரல் இறுதிக்குள் மீண்டும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய சாலைகள்: இது போக மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள் (லிங்க் ரோடு) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைகள் மூலம் பராமரிக்கப்படும் சாலைகளை இணைக்கும் வகையில் இந்த புதிய லிங்க் சாலைகளை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
முதல் கட்டமாக அடையாறு ஆற்றின் அருகே உள்ள இசைக் கல்லூரி அருகே டிஜிஎஸ் தினகரன் சாலை மற்றும் துர்காபாய் தேஷ்முக் சாலையை இணைக்கும் வகையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இணைப்புச் சாலை அமைக்க அதிகாரிகள் முன்மொழிந்துள்ளனர்.
சாந்தோம், மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், சாந்தோம் ஹைரோடு போன்ற பல முக்கிய சாலைகளில் போக்குவரத்தை மாற்ற ரிங்க் ரோடு அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆராயத் தொடங்கியுள்ளனர்.
இதேபோல், மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வரும் அண்ணாநகர் பகுதி மக்கள், ஜவஹர்லால் நேருசாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வார்டு 104ல் உள்ள பிள்ளையார் கோயில் தெருவிலிருந்து வார்டு 90ல் உள்ள பாடி குப்பம் சாலையை இணைக்கும் வகையில் இணைப்பு சாலை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பணியால் குறைந்தது இன்னும் ஒரு வருடத்திற்கு அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாடி குப்பம் ரோட்டில் இருந்து பிள்ளையார் கோயில் தெரு வரை 900 மீட்டர் தூரத்திற்கு செல்லும் இந்த இணைப்பு சாலை, மதுரவாயல், பூந்தமல்லி, வானகரம் ஆகிய பகுதிகளில் இருந்து வாகனங்கள் செல்ல வசதியாக இருக்கும். இந்த வாகனங்கள் ரெயில் நகர் பாலத்தை கடந்து பூந்தமல்லி உயர் சாலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications