தமிழ்நாட்டில் இனி பயணம் செய்யும் முறையே மாறுகிறது.. வாகன ஓட்டிகளுக்கு மேஜர் அறிவிப்பு.. கவனம்
சென்னை: புதிய சாலைப் பாதுகாப்புக் கொள்கை தமிழ்நாட்டில் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சாதகமான பல நடவடிக்கைகள் எடுக்கப்படும், அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சவால்களையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு மாநிலத்திற்காக ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய விரிவான சாலைப் பாதுகாப்புக் கொள்கை மற்றும் அனைத்து சார்புத்துறைகளுக்கான செயல்திட்டம் வகுப்பதற்காக, நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் கண்டறியப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது சாலையில் எப்படி பயணம் செய்ய வேண்டும், சாலை விதிகளை எப்படி அமைக்க வேண்டும், சிட்டி உள்ளே, புறவழி சாலைகளில் சாலை பயணங்கள் எப்படி இருக்கும் என்று இதில் முடிவு எடுக்கப்படும். இந்த விதிகள் வந்ததும் தமிழ்நாட்டில் சாலை விதிகள், பயன் செய்யும் முறை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போக தமிழ்நாட்டில் முக்கியமான 4 நகரங்களில் பைபாஸ் சாலைகள் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பைபாஸ் சாலைகள் மூலம் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து பெரிய அளவில் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாலைகள் வருகிறது: தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறையானது, 1,055 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களை உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் கொண்டு வர உள்ளது. 6 புறவழிச்சாலைகள் இதில் அமைக்கப்பட உள்ளன. உங்கள் தொகுதியில் முதல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கும்.
கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு நெடுஞ்சாலைத் திட்டங்களில் 42,662 கோடி முதலீடு செய்துள்ளதாகவும், அதில் 62% நிதி அதிமுக ஆட்சியில் இருந்து நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
விளக்கம்: சாலை கிராசிங்குங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றும் நோக்கில், 'முதலமைச்சர் அனைத்து பருவகால தடையில்லா இணைப்புத் திட்டத்தின்' கீழ் 50 தரைப்பாலங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், இத்திட்டத்தின் கீழ் 1,146 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட்டுள்ளன, என்று அவர் கூறினார். 'முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில்' அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை, ஈரோடு-கரூர், ராமநாதபுரம்-சிவகங்கை சாலைகள் உட்பட 200 கிமீ நீளமுள்ள இருவழிச் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மேம்படுத்தப்படும்.
பைபாஸ் சாலைகள்: மேலும், நடப்பு நிதியாண்டில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், 550 கிமீ நீளமுள்ள ஒற்றை வழிச் சாலைகள் இரண்டு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும். தென்காசி, ஆற்காடு, போடிநாயக்கனூர், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் புதிய புறவழிச்சாலைகள் அமைக்கப்படும்.
மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களை இணைக்கும் புதிய சாலை மற்றும் மதுரையில் உள்ள சித்தம்பட்டி மற்றும் தென்காசி ரோட்டில் ஆலம்பட்டியை இணைக்கும் வெளிவட்ட சாலைக்கு விரிவான திட்ட அறிக்கைகளை நெடுஞ்சாலைத்துறை தயாரிக்கும். தொழில் வளர்ச்சியை அதிகரிக்கவும், இத்துறைகளுக்கு சரக்குகள் சீராக செல்வதை உறுதி செய்யவும், தொழில்களை இணைக்கும் சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளை இணைக்கும் சாலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் 200 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என வேலு கூறினார். மேலும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க, 25 கோடி ரூபாய் செலவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications