சென்னையின் முக்கிய பகுதியில் வரும் 6 வழிச்சாலை.. களமிறக்கப்பட்ட பல நூறு கோடி.. ரெடியாகும் தங்க சாலை!
சென்னை: சென்னையில் மதுரவாயல் உயர்மட்ட சாலை பணிகள் 50% முடிந்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் மதுரவாயல் ஸ்ரீபெரும்புதூர் இடையே அமையவுள்ள ₹600 கோடி மதிப்பிலான ஆறு வழி உயர்மட்டச் சாலைத் திட்டத்தின் பணிகள் தொடங்கி உள்ளன.
சமீபத்தில் புதுச்சேரியில் ₹2,050 கோடி மதிப்பிலான மூன்று முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பேசிய கட்கரி, சென்னை துறைமுகம் மற்றும் மதுரவாயல் இடையே கட்டப்பட்டு வரும் நான்கு வழி உயர்மட்டச் சாலைப் பணிகள் வேகமாக நடந்து வருவதாக தெரிவித்தார்.

இந்தத் திட்டம் நிறைவடைந்தால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும். சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிறைவுபெற்று, பயண நேரத்தை இரண்டு மணி நேரமாகக் குறைக்கும்.
இந்தத் திட்டங்களில், ₹1,558 கோடி செலவில் கட்டப்பட்ட புதுச்சேரி-பூண்டியாங்குப்பம் புறவழிச் சாலை திறப்பு விழா, ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரை ₹436 கோடி செலவில் கட்டப்படவுள்ள மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, மற்றும் ₹25 கோடி மதிப்பிலான கணபதி செட்டிகுளம்-புதுச்சேரி சாலை மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை அடங்கும், என்று அறிவித்தார்.
மதுரைவாயல்-ஸ்ரீபெரும்புதூர் உயர்மட்டச் சாலை
மதுரைவாயல்-ஸ்ரீபெரும்புதூர் உயர்மட்டச் சாலை, சென்னையின் துறைமுக இணைப்பை மேம்படுத்தி, வர்த்தகத் திறனை அதிகரிக்கும் என்று அமைச்சர் கூறினார். மேலும், நடேசன் நகர் முதல் மரப்பாலம் சந்திப்பு வரையிலான 3 கி.மீ நீளமுள்ள நான்கு வழி உயர்மட்டச் சாலை மற்றும் கடலூர் சாலையில் அரியங்குப்பம் முதல் முள்ளோடை வரையிலான 13.5 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச் சாலை ஆகியவற்றுக்கு ₹650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையேயான போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, விழுப்புரம் உடனான இணைப்பை மேம்படுத்தும் இந்தத் திட்டங்களுக்கு, முதல்வர் என். ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் ஆகியோரின் கோரிக்கையின் பேரில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ₹2,200 கோடி மதிப்பீட்டில் 46 கி.மீ நீளமுள்ள நான்கு வழி புதுச்சேரி-மரக்காணம் உயர்மட்டச் சாலைத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி-மரக்காணம் உயர்மட்டச் சாலை
இந்த ஆண்டு இறுதிக்குள் தளவாடச் செலவுகளை 9% ஆகக் குறைக்க முயற்சிகள் நடந்து வருவதாக மத்திய அமைச்சர் கட்கரி தெரிவித்தார். மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருள் துறையில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக இருக்கும் என்றும் அவர் புதுச்சேரியில் நடந்த ஒரு நிகழ்வில் கூறினார்.
இந்தியாவில் வாகனத் துறையின் வளர்ச்சி 2014-ல் ₹14 லட்சம் கோடியாக இருந்து தற்போது ₹22 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றும், இது 4.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ₹1,588 கோடி செலவில் கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலை 32-ன் 38 கி.மீ நீளமுள்ள புதுச்சேரி-பூண்டியாங்குப்பம் நான்கு வழிச் சாலையை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தேசிய நெடுஞ்சாலை 32-ல் இந்திரா காந்தி சதுக்கம் மற்றும் ராஜீவ் காந்தி சதுக்கம் இடையே ₹436 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள 4 கி.மீ உயர்மட்டச் சாலைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். மேலும், கிழக்குக் கடற்கரைச் சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 332A) 14 கி.மீ நீளமுள்ள ₹25 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
மின்சார வாகனப் பயன்பாடு மற்றும் மாற்று எரிபொருட்கள் தளவாடச் செலவுகளைக் குறைப்பதிலும், ஏற்றுமதிப் போட்டித்தன்மையை அதிகரிப்பதிலும் முக்கியப் பங்காற்றும் என்று கட்கரி வலியுறுத்தினார். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் தளவாடச் செலவுகளை 9% ஆகக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.













Click it and Unblock the Notifications