"சில்லுன்னு ஒரு அனுபவம்".. புத்தம் புது மின்னல் தொடர்!
மண்வாசனையுடன் கூடிய எழுத்துக்கள் "ஆக்சிஜனுக்கு" சமம்.. அப்படிப்பட்ட எழுத்தாளர்களின் வரிசை மிக மிக அருகி வருகிறது. குறிப்பாக பெண் எழுத்தாளர்கள்.. அந்த வகையில் ஒரு புதுமுக எழுத்தாளரை நம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஒவ்வொரு சீமைக்கும் ஒரு சீரும் சிறப்பும் இருக்கும்.. ஒஸ்த்தியான பல விஷயங்களை உள்ளுக்குள் வைத்திருக்கும்.. உற்று நோக்கி உள் வாங்கி அருகில் போனால் சொர்க்கமாக நம்மை உணர வைக்கும். அந்த வகையில் நெல்லைச் சீமைக்கும் தனி வாசம் உண்டு.
இலக்கியத்திற்கு நெல்லைச் சீமை ஈன்ற பிள்ளைகள் அதிகம்.. அதில் ஒருவராக புன்னகை பூத்து நிற்கிறார் நம்முடைய விஜயா கிப்ட்சன். புத்தெழுச்சியுடன் கூடிய மின்னல் வேக எழுத்துக்குச் சொந்தக்காரராக திகழும் விஜயா கிப்ட்சன்.. வழக்கமான எழுத்தாளர்களைப் போல இல்லாமல் தனித்து நிற்கும் தகுதியும் திறமையும் படைத்தவராக திகழ்வது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் விஜயா கிப்ட்சன்.. நமக்காக குட்டித் தொடர் ஒன்றை எழுதுகிறார்.. நெல்லை வாசத்துடன்.. இன்று முதல்.. உங்களை வாரா வாரம் பின் தொடருவார்.. தொடர்ந்து படியுங்கள்.
"சில்லுன்னு ஒரு அனுபவம்".. விஜயா கிப்ட்சன் எழுதும் புதிய தொடர்.. முதல் பகுதி
" title="சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 2... "பெம்மி"!" />சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 2... "பெம்மி"!