Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலூட்டிய மார்பை அறுப்பியா? ஆண்களின் வன்முறையை கிழித்தெறிந்த நடிகை தீபா! கடைசியில் சொன்ன டாப் விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை தீபா, தற்போது திரைப்படங்களில் ஹீரோக்களின் அம்மா மற்றும் அக்கா கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் ஆகிவிட்டார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிராகச் செயல்படும் ஆண்களைக் குறித்து கடும் ஆதங்கத்துடனும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பேசிய வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Deepa vijay tv

தீபா ஆதங்கம்

நடிகை தீபா அவரது பேச்சில், சில மாதங்களுக்கு முன்பு ஒருவன் ஒரு குறிப்பிட்ட சாதிப் பெண்களின் மார்பை அறுக்க போவதாகச் சொல்லியதைக் குறித்து ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். "மார்பை அறுக்க வேணும்னு சொல்லுறவன் அவங்க அம்மா கிட்ட பால் குடித்துவிட்டுத் தானே வந்தான்? பொதுவாகக் கடவுள் படைக்கும்போதே பெண்களுக்கு மார்பை எதற்குப் படைச்சான்? அவருடைய குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்காகத் தான்.

இன்னொரு உயிரை வளர்க்கிறதுக்காகத் தான் கடவுள் படைக்கப்பட்ட ஒரு உறுப்பை, உன் இஷ்டத்துக்கு நீ அறுத்து வீசணும்னு சொல்லுறியே?" என்று ஆதங்கப்பட்டார். "அப்போ உங்க அம்மாவுக்கு இன்னொருத்தன் வந்து அறுத்தா நீ என்னடா பண்ணுவ? அப்போ நீ எப்படி வளர்ந்து இருப்ப" என்று மிக கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொலை சமூகத்தின் கேள்வி

"உனக்கு ஒரு பெண் மீது காதல் வரலாம் - ஆனால் அதே பெண்ணுக்கு இன்னொருத்தர் மீது காதல் வந்தால் தப்பா? உன்னைக் காதலிக்கவில்லை என்கிறதுக்காக நீ அந்தப் பெண் மீது ஆசிட் ஊத்தலாமா? அந்த பெண்ணை கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கலாமா" என்று தீபா கேள்வி எழுப்பினார்.

"அந்தப் பொண்ணுடைய வாழ்க்கையை அழிச்சிட்டு நீ என்ன சந்தோஷத்தை அடைந்திட போற? உன்னுடைய வாழ்க்கையும் அதோட அழிஞ்சிட்டுத் தானே போகுது... நாளைக்கு நம்மை பாத்துக்கவான்னு நினைக்கிற உன்னுடைய பெற்றோரும் அழுதுட்டுத் தானே இருக்க போறாங்க" எனச் சாடினார்.

ஆணின் இரட்டை தரம்

தேவதாசி பட்டம் கொடுக்கும் ஆண்களின் இரட்டை தரத்தையும் தீபா வெளியிட்டார்: "எங்களை பார்த்துத் 'தேவதாசி'ன்னு ஒருத்தன் திட்டுறான். ஆனால் ஊருக்குள்ள கரகாட்டக்காரியை கூட்டிட்டு வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடவச்சுப் பார்த்து ரசிக்கிற உன்னை என்ன சொல்ல? எங்களை 'தேவதாசி'ன்னு சொல்லுற நீ அப்போ யாரு? தன்னை பேசுறதுக்கு முன்னாடி அடுத்தவங்களையும் யோசிச்சுப் பாரு" என்று கடுமையாகக் கேட்டார்.

பாதுகாக்க படைக்கப்பட்டவன்

"பொதுவாகக் கடவுள் படைக்கும்போது பெண்களை பாதுகாக்கத் தான் ஆண்களையே படைச்சாரு. அப்படின்னா வலிமையானவன் யாரு நீதானே? அவங்க பாதுகாப்பில் இருக்கிற பெண்களை அவங்கதானே பூப்போலப் பாத்துக்கணும்? ஆனா உன் வீட்டுப் பொண்ணுங்களுக்கு ஒரு நியாயம் - அடுத்த வீட்டுப் பொண்ணுங்களுக்கு ஒரு நியாயம்னு எப்படி நீ எடுத்துக்கலாம்" என்று வேதனையுடன் பேசினார்.

ஆண்களுக்கான அட்வைஸ்

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை நிறுத்த, ஆண்கள் பின்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்: பெண்கள் என்பது உரிமைப் பொருள் அல்ல; அவர்கள் சுயசிந்தனை, சுய உரிமை கொண்ட மனிதர்கள் என்பதை உணர வேண்டும். முடிவெடுக்கும் உரிமையை மதிப்பதே வன்முறையைத் தடுக்கும் முதல் படி.

ஏமாற்றம், காதல் மறுப்பு போன்ற சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்த்து, ஆரோக்கியமான முறையில் தன்னுடைய கோபத்தை வெளியிடக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் யாரோ ஒருவரின் அக்கா, தங்கை, அம்மா என்பதை நினைவில் கொண்டு, அவர்களுக்கு நேரும் பாதிப்பைத் தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நேர்ந்தால் எப்படி இருக்கும் என்று சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, வன்முறைக் குற்றங்களுக்குத் தண்டனை உண்டு என்பதையும், இதனால் தங்கள் வாழ்க்கை மட்டுமின்றி பெற்றோரின் வாழ்க்கையும் அழியும் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+