திரிஷாவை கூட்டிட்டு வந்தா தான் விருது.. போனில் நடந்த டீல்.. ஓபனா போட்டு உடைத்த அமீர்
சென்னை: இயக்குநர் அமீர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளையும் உணர்ச்சிப் பின்னணியையும் கொண்ட படங்களை உருவாக்கிய இயக்குநர்களில் முக்கியமானவர். இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்தவர். தற்போது அவர் அளித்த ஒரு பழைய நினைவுகளை பகிர்ந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமீரின் ஆசை
அந்த பேட்டியில் அமீர் தனது கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்துள்ளார். "எனக்கு பொதுவாக விருதுகள் மீது பெரிதாக ஆசை கிடையாது. ஆனால் என் சொந்த ஊரான மதுரையில் ஒருநாள் விருது வாங்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது" என்று அவர் கூறியுள்ளார். அவர் கல்லூரியில் படித்த காலத்தில் ஹாஸ்டலில் தங்கி இருந்ததாகவும், அந்த ஹாஸ்டலுக்கு எதிரில் ஒரு பெரிய மண்டபம் இருந்ததாகவும் கூறுகிறார். அந்த மண்டபத்தில் அடிக்கடி விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கும்.
அதை பார்த்துக் கொண்டே இருப்பேன். "ஒருநாள் நாம இங்கே வந்து விருது வாங்கணும்" என்று அந்த காலத்திலேயே மனதில் நினைத்துக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
முதல் படம்
அதன் பிறகு அவர் இயக்கிய முதல் திரைப்படமான மௌனம் பேசியதே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த படம் வெளியான பிறகு பல இடங்களில் அவருக்கு விருதுகள் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் அந்த வெற்றிகளுக்குப் பிறகும் "என் சொந்த ஊரில் இன்னும் விருது வாங்கலையே" என்ற ஏக்கம் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்ததாக அமீர் தெரிவித்துள்ளார்.
வாய்ப்பையும் மறுத்த அமீர்
அந்த நேரத்தில் ஒருநாள் மதுரையில் அவர் ஆசைப்பட்ட அதே மண்டபத்தில் நடைபெறும் விருது விழா குழுவிலிருந்து அவருக்கு போன் வந்ததாம். அப்போது "மௌனம் பேசியதே படத்திற்காக உங்களுக்குஸசிறந்த இயக்குநர் விருது கொடுக்க இருக்கிறோம். நீங்கள் வந்து விருது வாங்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்கள்.
அதை கேட்ட அமீர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், எப்போது வர வேண்டும், எந்த தேதி நிகழ்ச்சி நடக்கிறது என்று எல்லா விவரங்களையும் கேட்டதாகவும் கூறினார்.
ஆனால் கடைசியில் அந்த குழுவினர், "நீங்கள் வரும்போது நடிகை திரிஷாவையும் கூட்டி கொண்டு வாருங்கள்" என்று அவர்கள் கூறியதாக அமீர் தெரிவித்தார். அதை கேட்ட அமீர் "அவங்க எதற்கு வரணும்? எனக்கு இயக்குநர் விருது கொடுக்கிறீங்க. அதற்காக ஏன் அவரை கூட்டிட்டு வரணும்? அவருக்கும் விருது கொடுக்கிறீங்களா?" என்று கேட்டதாக அவர் கூறினார்.
அதற்கு அவர்கள், "இல்லை... அவருக்கு விருது கிடையாது. ஆனால் உங்கள் படத்தில் அவரை அறிமுகப்படுத்தியதால் அவரையும் கூட்டி கொண்டு வாருங்கள்" என்று கூறியதாக அமீர் தெரிவித்துள்ளார். அதை கேட்ட அமீர், "இப்படி ஒரு நிபந்தனை இருந்தால் எனக்கு அந்த விருது தேவையில்லை" என்று சொல்லி அந்த வாய்ப்பையே மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.
எளிமையான பழக்கவழக்கம்
அமீர் மேலும் கூறும்போது, தன்னுடைய வாழ்க்கை முறை பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். "பொதுவாக நான் ஒரு படம் முடிந்த பிறகு அந்த படத்தில் நடித்த அனைவருடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்க மாட்டேன். சில முக்கியமானவர்களுடன் மட்டும் தான் தொடர்பில் இருப்பேன். என் வீட்டில் அல்லது என்னுடைய நிகழ்ச்சிகளில் கூட எல்லாரையும் அழைப்பது கிடையாது. மிகவும் நெருக்கமான சிலருடன் மட்டும் தான் தொடர்பு வைத்திருப்பேன்" என்று அவர் கூறியுள்ளார்.
யார் இந்த அமீர்?
அமீர் மதுரையைச் சேர்ந்தவர். தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான அவர் பின்னர் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் பாலா உடன் உதவி இயக்குநராக பணியாற்றிய பிறகு தான் அவர் தனியாக இயக்குநராக களம் இறங்கினார்.
அவர் இயக்கிய முதல் படம் மௌனம் பேசியதே. அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு அவர் இயக்கிய பருத்திவீரன் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் என்று சொல்லலாம்.
விருதுகளும் பாராட்டுகளும்
பருத்திவீரன் படம் வெளியானபோது விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது. அந்த படம் பல விருதுகளையும் வென்றது. அதன் பிறகு அமீர் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் பல முயற்சிகளை மேற்கொண்டார். சினிமாவில் வித்தியாசமான கதைகளை சொல்ல முயற்சி செய்யும் இயக்குநராக அவருக்கு தனி இடம் உருவானது.
வைரலாகும் பேட்டி
தற்போது அவர் பகிர்ந்த இந்த அனுபவம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக விருது வாங்கும் வாய்ப்பையே அவர் மறுத்த சம்பவம் குறித்து பலரும் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சினிமாவில் பலர் விருதுகளை பெரிதாக எதிர்பார்க்கும் காலத்தில், ஒரு நிபந்தனை காரணமாக அதையே மறுத்துவிட்டார் என்ற அமீரின் இந்த பேட்டி தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
விஜயுடன் கல்யாணம்.. தாலி கட்டும் தேதி..! திரிஷா அம்மா கொடுத்த ரியாக்ஷன்..! அடுத்த பஞ்சாயத்து ஸ்டார்ட் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
நான் கர்ப்பமானதும் விட்டு விலகி விடுவேன்.. போல்டாக பேசிய திரிஷா! இத்தனை சம்பவம் நடந்திருக்கிறதாம்! -
விஜய் டெல்லி போனது தெரியும்.. திரிஷா மும்பை போனது தெரியுமா.. இறுதியாகும் கூட்டணி.. தவெகவில் டிவிஸ்ட் -
மே.4 சம்பவம் இருக்கு.. என்ன தவெக ஆட்சியை பிடிக்கப்போகுதா! அதான் இல்லை.. த்ரிஷா பர்த்டே! -
பார்த்திபன் சொன்ன வார்த்தை.. ஆனால் திரிஷா கொடுத்த ரிவெஞ்ச்! இது லிஸ்டிலேயே இல்லாதது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத்














Click it and Unblock the Notifications