Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்”
சென்னை: சினிமாவில் ஒரு சிறிய கேரக்டர் கூட சில நேரங்களில் பெரிய அடையாளத்தை கொடுத்து விடும். அதற்கு நல்ல உதாரணம் தான் நடிகை பாவனி கரணம். இவருடைய பெயரை கேட்டதும் இவர் யார் என்று பெரிதாக பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் புஷ்பா படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்ததன் மூலம் இவர் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.

புஷ்பா மூலம் கிடைத்த பெரிய பிரேக்
அல்லு அர்ஜுன் நடித்த "புஷ்பா" படம் வெளியானபோது, அதில் வந்த ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த வகையில், "புஷ்பா ராஜ்" கதை திருப்பத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு கேரக்டரில் பாவனி நடித்திருந்தார்.
அவருடைய ஸ்கிரீன் டைம் அதிகமாக இல்லையென்றாலும், அந்த கேரக்டர் ரசிகர்களிடம் நன்றாக பதிந்தது. இதன் மூலம் பாவனிக்கு ஒரு நல்ல அடையாளம் கிடைத்தது.
ஆரம்ப வாழ்க்கை
தெலுங்கானா மாநிலம் மண்சிரியாலா பகுதியை சேர்ந்தவர் பாவனி. சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் வளர்ந்தவராம். அதற்காக அவர் நடிப்பு பயிற்சி எடுத்ததோடு, பல ஆடிஷன்களிலும் கலந்து கொண்டுள்ளார். ஆரம்பத்தில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் சிரமப்பட்டாலும், சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தன்னை நிரூபிக்க முயன்றார்.
சினிமா பயணம்
பாவனி முதலில் சில படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாக தான் நடித்தார். "பரேஷான்" படத்தில் நடித்தது அவருக்கு நல்ல கவனத்தை கொடுத்தது. "சமோசா ஷிரிஷா" என்ற டயலாக் அந்த படத்தில் வைரலானது. அதன் பிறகு "பைலம் பில்லகா" என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். HIT 2 படத்திலும் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்
இதற்குப் பிறகு வெப் சீரிஸ்கள், ஷார்ட் ஃபிலிம்கள் என பல துறைகளில் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார். இவர் தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் தமிழில் இவருக்கு பிரபலம் கிடைத்தது புஷ்பா படத்திற்கு பிறகு தான்.
சோஷியல் மீடியாவில் செம்ம ஆக்டிவ்
சினிமாவை தாண்டியும் பாவனி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். தனது தனிப்பட்ட வாழ்க்கை, ஷூட்டிங் அப்டேட்கள், புகைப்படங்கள் என அடிக்கடி பகிர்ந்து வருகிறார். குறிப்பாக அவர் வெளியிடும் ஸ்டைலிஷ் மற்றும் கிளாமர் புகைப்படங்கள் இளைஞர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன.
பெரிய நிகழ்ச்சியில் கவனம் பெற்ற பாவனி
சமீபத்தில் லக்ஷ்மி மஞ்சு தலைமையில் நடைபெற்ற "Teach for Change" நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பாவனி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களுடன் ராம்ப் வாக் செய்த அவர், அங்கு தனது ஸ்டைலால் அனைவரையும் கவர்ந்தார். அதன் பிறகு தான் "டாக் ஆஃப் த டவுன்" ஆக மாறினார்.
பவானி கரணம் தற்போது அதிகமாக தெலுங்கு படங்களில்தான் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் பெரிய அளவில் குறிப்பிடத்தக்க படங்களில் இன்னும் நடிக்கவில்லை. ஆனால் வெப் சீரிஸ் மற்றும் ஷார்ட் ஃபிலிம் அனுபவம் இருப்பதால், விரைவில் தமிழ் சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் ஒரு சின்ன வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் அது வாழ்க்கையை மாற்றி விடும் என்பதற்கு பாவனி கரணம் ஒரு நல்ல உதாரணம். "புஷ்பா" படத்தில் வந்த ஒரு கேரக்டர் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான இவர், இப்போது படிப்படியாக தனது இடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்திய நிகழ்ச்சிகளில் அவரது வருகை, சோசியல் மீடியாவில் கிடைக்கும் வரவேற்பு என எல்லாம் சேர்த்து பார்த்தால், இனிமேல் இந்த பெயரை அதிகமாக கேட்கலாம் என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications