ஹீரோக்கள் ரூ.150 கோடி சம்பளம் வாங்கி.. தயாரிப்பாளர்களையே காலி பண்ணிட்டாங்க: திருப்பூர் சுப்பிரமணியம்
திருப்பூர்: 100 கோடி 150 கோடி என சம்பளம் வாங்கியவர்கள் இன்று பணியின்றி வீட்டில் உள்ளனர் என்றும், அவர்களால் தயாரிப்பாளர்கள் காலாவதி ஆகிவிட்டனர் என்றும் திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளது, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை தந்து வருகிறது. அதுமட்டுமல்ல, சிறு நடிகர்கள் படத்திற்கு மக்களே வருவதில்லை. 10 முக்கிய நடிகர்கள் படத்திற்கு தான் மக்களே வருகிறார்கள் என்று பேசியிருப்பதும் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.
தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர். திருப்பூர் சுப்ரமணியம் சில நாட்களுக்கு முன்பு பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்திருந்தார்.

அதில், "இந்த 2025ம் வருடம் வருடம் இதுவரை 187 படங்கள் வெளிவந்திருக்கிறது.. இதில் 18 சதவீதம் கூட வெற்றி கிடையாது.. முதல் வரிசை நடிகர்களின் படங்கள் கூடசரியாக ஓடுவதில்லை..
தயாரிப்பு செலவுகள், நடிகர், நடிகைகளின் சம்பளம் எல்லாமே விண்ணை முட்டும் அளவுக்கு போய்விட்டது. அதிலும் ஓடிடி பிளாட்பாரத்தில் படங்களை வாங்க ஆரம்பித்துமே, நடிகர்கள் தங்கள் சம்பளங்களை கன்னாபின்னாவென்று உயர்த்தி விட்டார்கள்.
ஓடிடி சாட்டிலைட்
2024 நவம்பர், டிசம்பர் ஓடிடி சாட்டிலைட் என எல்லாருமே கதவை அடைத்துவிட்டார்கள். இதனால் பெரிய சம்பளம் வாங்கிய பெரிய நடிகர்களின் படங்களையே வெளியிட முடியவில்லை.. ஓடிடி பிளாட்பார்ம்கள் வந்ததிலிருந்தே, சேட்டிலைட் சேனல்களுக்கு பாதிப்பாகிவிட்டது.
தியேட்டர்களில் நன்றாக ஓடுவதை வைத்து, அங்கு வசூலாவதை வைத்துதான் ஓடிடியில் வாங்குகிறார்கள்.. இதனால் தயாரிப்பாளர்களுக்கும் ஓடிடி, சாட்டிலைட்களிலிருந்து வருமானம் வரவில்லை. தியேட்டர்களிலிருந்தும் பணம் வருவதும் குறைந்துவிட்டது" என்றெல்லாம் வேதனையுடன் கூறியிருந்தார்.
ரூ.100 கோடி சம்பளம்
இந்நிலையில், திருப்பூர் சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.. அப்போது அவர் சொல்லும்போது, "100 கோடி 150 கோடி என சம்பளம் வாங்கியவர்கள் இன்று பணியின்றி வீட்டில் உள்ளனர். காரணம் அப்படி சம்பளம் கொடுத்த நிறுவனங்கள் இன்று மூடப்பட்டுள்ளது.
திரையரங்குகளுக்கு படங்கள் முழுமையாக இல்லை. இதற்கு காரணம் பெரிய நடிகர்கள் தான். 8 வாரம் கழித்து தான் ஓடிடி வெளியீடு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் ஆனால் இதன் பாதிப்பு இன்று தெரிகிறது. யாருடைய படமும் ரிலீஸ் செய்ய முடியவில்லை.
நடிகையின் ஹேர் ஸ்டைலர், ஹீரோவின் பவுன்சர்
நடிகை சிகை அலங்கார நிபுணருக்கு 1 நாள் பேட்டா 25 ஆயிரம், ஹீரோ பவுன்சருக்கு பேட்டா, பெட்ரோல் என அனைத்தையும் தயாரிப்பாளரிடம் வசூலித்ததால் பல தயாரிப்பு நிறுவனங்கள் முடிந்து விட்டது.
AVM போன்ற நிறுவனங்கள் இன்று சொந்த படம் எடுக்க விரும்புவதில்லை. தென்னிந்திய சினிமா அதல பாதாளத்தில் உள்ளது. இதனை சரி செய்ய தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என முத்தரப்பு நேரடி கூட்டம் நடத்தி ஆலோசனை செய்யப்படும். இனி நடிகர்களுக்கு சம்பளம் கிடையாது . விகிதாச்சார அடிப்படையில் தான் ஊதியம் என்பதே எங்கள் முடிவு.
கமல், அஜித், சிம்பு , சிவகார்த்திகேயன் என பெரிய நடிகர்கள் படங்கள் எதுவும் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கிறார்கள். பி.வி.ஆர் குழுமம் கூட நஷ்டத்தில் தான் இயங்குகிறது.
பெரிய ஹீரோக்கள் - சிறு படங்கள்
பெரிய ஹீரோக்கள் தயாரிப்பாளர்களை நல்ல படியாக வைத்துக் கொள்ளுங்கள், அநாவசிய செலவுகளை தவிர்த்தால் சினிமா தொழில் சிறக்கும். சிறு படங்கள் எடுப்பவர்கள் கூட கதைக் கருவை மையமாக வைத்து எடுக்கின்றனர். ஆனால் பெரிய படங்களில் நடிகர்களை மையப்படுத்தி எடுக்கிறார்கள்.
கர்ணன், ஆயிரத்தில் ஒருவன், கில்லி, சச்சின் போன்ற ஒரு சில படங்கள் தான் ரீ ரிலிசில் சாதித்தன. இப்போதைய நடவடிக்கை மூலம் கூடுதல் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். சிறு நடிகர்கள் படத்திற்கு மக்களே வருவதில்லை. 10 முக்கிய நடிகர்கள் படத்திற்கு தான் மக்களே வருகிறார்கள்" என்றெல்லாம் தற்போதைய சூழல் குறித்து பேசியிருக்கிறார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications