சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்? அண்ணா நகர் வீடு இப்போதானே விற்றாரு.. அதற்குள் இப்படியா? காரணம் இதுதானா?
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள அவரது சொந்த வீடு இடிக்கப்படவுள்ளதாக கூறப்படும் இந்த தகவல், ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

நடிகர் விஜயின் சாலிகிராமம் வீடு
இந்த சாலிகிராமம் வீடு, விஜய்யின் குடும்பத்துடன் நெருக்கமாக இணைந்த முக்கியமான இடமாக இருந்தது. இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனது அலுவலகத்தை இங்கு தான் கவனித்து வந்தார். அதேபோல், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஒரு கட்டத்தில் தனது இசை ஸ்டூடியோவையும் இவ்விடத்தில் நடத்தி வந்ததாக ஏற்கனவே பேட்டியில் பேசி இருக்கிறார்.
விஜய் ஆண்டனி உருக்கம்
தனக்கு ஆபிஸ் இல்லாத போது விஜய்யும், அவருடைய அப்பா சந்திரசேகரும் தான் அந்த வீட்டில் தங்கி கொள்ள சொன்னதாகவும், தான் அந்த வீட்டில் சில சேஞ்சஸ் செய்த போது கூட விஜயோ அல்லது அவருடைய அப்பாவோ என்னிடம் எந்த கேள்விகளுமே கேட்டதில்லை .அது என்னுடைய சொந்த வீடு போலத்தான் அவர்கள் என்னை பயன்படுத்த விட்டிருந்தார்கள் என்று பெருமையாக பேசி இருந்தார்.
விஜய் அப்பா கொடுத்த அன்னதானம்
இந்த வீட்டில் சமூக சேவையாக தினசரி அன்னதானம் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்த வீடு குடும்பத்திற்கும் அப்பகுதி மக்களுக்கும் முக்கியமான இடமாக இருந்து வந்தது.
விஜய் வீடு இடிப்பு
இந்நிலையில், அந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிடம் காலப்போக்கில் பழமையான நிலையில் மாறியிருப்பதும், இதனால் அதை மாற்றி விட்டு புதியதாக அந்த இடத்தில் வீடு கட்ட போவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே இந்த இடிப்பு பணிகளை தொடங்கும் முயற்சியும் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் சூழலில் பின்னர் தேவையற்ற விமர்சனங்கள் எழாமல் இருக்க முன்கூட்டியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
இதற்கிடையில், விஜய் சமீபத்தில் அண்ணாநகர் பகுதியில் இருந்த தனது மற்றொரு வீட்டை சுமார் 35 கோடி ரூபாய்க்கு விற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்த விற்பனைக்கான காரணம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.
அதே நேரத்தில், விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டாலும், இதுகுறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
மொத்தத்தில், சாலிகிராமம் வீட்டை இடித்து புதிய கட்டிடம் அமைக்கும் திட்டம் என்பது ஒரு சொத்து மேம்பாட்டு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், அந்த வீட்டுடன் இணைந்திருந்த பழைய நினைவுகள் காரணமாக இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications