Khushbu: சுந்தர் சி வீட்டில் சமரசம்? செல்போன் சுவிட்ச் ஆஃப்! குஷ்பூவை சந்தித்த நடிகைகள், அவரே வெளியிட்ட பதிவு
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்திலிருந்து இயக்குநர் சுந்தர். சி விலகிய விவகாரம் தான் இப்போது சோசியல் மீடியாவில் அனல் பறக்கப் பேசப்பட்டு வருகிறது. சுந்தர். சி விலகியதால் கிளம்பியக் கேவலமான கமெண்டுகளுக்கு நடிகை குஷ்பு கொடுத்த பதிலடி தான் இன்னமும் HIT அடித்து வருகிறது. இந்தச் சர்ச்சை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, நடிகை குஷ்பு வீட்டில் நடந்த நட்புச் சந்திப்புதான் இப்போதுப் பெரிய செய்தியாகி இருக்கிறது!

குஷ்பு சமாதானம்
தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர். சி விலகியதற்கு பிறகு, ரஜினி படத்துக்காகச் சுந்தர். சியிடம் அவருடைய மனைவியான குஷ்பு சமரசம் பேச முயன்றதாகவும், அதற்குச் சுந்தர். சி கோபப்பட்டுக்கொண்டு போனை OFF செய்துவிட்டு வீட்டைவிட்டு வெளியே கிளம்பிவிட்டார் என்றும் சில செய்திகள் பரவின.
குஷ்புவின் போஸ்ட்
இந்த வதந்திகள் ஒருபுறம் பரவ, குஷ்பு தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, தனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தவர்கள் யார் என்று அறிவித்துள்ளார். குஷ்புவின் வீட்டிற்கு நடிகை திரிஷா, ஜெயம் ரவியின் முன்னாள் மனைவியான ஆர்த்தி ரவி, சுந்தர். சியின் சகோதரியான அனி சுந்தர் மற்றும் சுஜாதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்.

குதூகலமான பதிவு
அப்போது எடுத்த புகைப்படங்களை நடிகை பிருந்தா கோபால் தனதுப் பக்கத்தில் பகிர்ந்து, "வந்ததற்கு நன்றி ஸ்வீட்ஹார்ட்ஸ் என்று பதிவிட்டுள்ளார். அதைக் குஷ்பு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீஷேர் செய்து, இந்தப் பரபரப்பானச் சூழலிலும் தான் மகிழ்ச்சியாக இருக்கக் காரணம் இவர்கள்தான் என்று மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார்.
குஷ்புவின் பதிலடி
சுந்தர். சி விலகியதை அடுத்து, ரஜினிகாந்தைப் பற்றி ஒரு இணையவாசி மிகவும் மோசமான கமெண்ட் ஒன்றை இட்டிருந்தான். "ஐட்டம் பாடலுக்குக் குஷ்புவை ஆடச் சொல்லியிருப்பானோ, அதனால் தான் சுந்தர். சி படத்திலிருந்து விலகிவிட்டார்" என்று அந்த இணையவாசி அருவருக்கத்தக்க விதத்தில் கருத்தைப் பதிவிட்டிருந்தான். இதற்குப் பதிலடி கொடுத்த குஷ்பு, "இல்லை.. உங்க வீட்ல இருந்து யாராவது ஆட வைக்கலாம்னு நினைச்சோம்" எனப் பதிவிட்டு, தன் கணவருக்கோ, ரஜினி சாருக்கோ எதிராகப் பேசியவனுக்குத் தரமானப் பதிலடி கொடுத்திருந்தார்.
தலைவர் 173 பற்றிய தகவல்
நடிகர் ரஜினிகாந்தின் 173வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. சுந்தர். சி விலகிய நிலையில், இந்தப் படம் கைவிடப்படாமல், விரைவில் வேறொரு இயக்குநருடன் தொடரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுந்தர். சி விலகியதற்குக் காரணம் என்ன என்பது மர்மமாக இருந்தாலும், தனது FUN GANG சகிதமாகக் குஷ்பு மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்த இந்தச் சந்திப்பு, சர்ச்சைகளுக்கு மத்தியில் ஓர் ஆறுதலாக அமைந்திருக்கிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications