சேலம் ஜீவா.. அதுக்குள்ளேயே கசந்துபோன காதல்.. சொல்ல சொல்ல கேட்காத இன்ஸ்டா மோகம்.. அடக்கடவுளே
சேலம்: சேலம் இளம்பெண் ஜீவா எடுத்த முடிவு, பெரும் அதிர்ச்சியை அப்பகுதி மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.
சேலம் மாவட்டம் அய்யம் பெருமாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்துரு.. 25 வயதாகிறது.. இவர் வெல்டிங் வேலையை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் ஜீவா. புதுச்சேரியை சேர்ந்தவர் ஜீவா.

காதல்: பெரும்பாலும் ஆன்லைனிலேயே பொழுதை கழிப்பதில் ஆர்வமுள்ளவர் ஜீவா.. அப்படித்தான் முகநூலில் ஜீவாவுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.. இருவரும் செல்போன் நம்பர்களை பகிர்ந்துகொண்டு அடிக்கடி பேசி வந்தனர்...
ஒருகட்டத்தில் இதுவே காதலாகவும் மலர்ந்தது.. அதற்கு பிறகு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் கல்யாணம் செய்து கொண்டார்கள்.. இப்போது இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது...
இன்ஸ்டாகிராம்: இப்படிப்பட்ட சூழலில், சந்துருவின் புத்தி மீண்டும் "ஆன்லைனிலேயே" தடுமாற துவங்கியது.. ஃபேஸ்புக்கைவிட, இன்ஸ்டாகிராமில் நிறைய நேரம் செலவிட்டு வந்ததுடன், பல பெண்களிடம் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.. இந்த விஷயம் ஜீவாவுக்கு தெரிந்து, சந்துருவை கண்டித்திருக்கிறார். ஆனாலும், சந்துரு இன்ஸ்டாகிராம் பெண்களிடம் தொடர்ந்து பேசி வந்ததால், ஜீவாவுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.
இறுதியில், இருவருக்கும் இடையே தகராறு வெடித்துள்ளது.. நாளுக்கு நாள் இந்த சண்டை அதிகரித்து வந்த நிலையில், கடந்த 4-ந் தேதியும் கணவன், மனைவி இடையே தகராறு வந்துள்ளது.. எவ்வளவோ அட்வைஸ் செய்தும், கணவன் திருந்தாத நிலையில், விரக்தி அடைந்த ஜீவா வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணை: இதையடுத்து, சூரமங்கலம் போலீசார் தகவலறிந்து விரைந்து வந்து, ஜீவாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், சேலம் உதவி கலெக்டர் அம்பாயிரநாதன், இது தொடர்பான விசாரணையை கையில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications