பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் பிறந்த நாள் விழா
புதுச்சேரி: பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் பிறந்தநாளும் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்ற பேராசிரியர் ஆ.மணி அவர்களுக்குப் பாராட்டு விழாவும் புதுச்சேரியில் இன்று நடைபெறுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரான பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் பிறந்தநாள் விழா இன்று (05.09.2013) புதுச்சேரியில் கொண்டாடப்படுகின்றது.
மேலும் இந்திய அரசின் செம்மொழி இளம் அறிஞர் விருதுபெறும் முனைவர் ஆ.மணி அவர்களுக்குப் பாராட்டு விழாவும் நடைபெறுகின்றது.
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் இன்று மாலை ஆறரை மணியிலிருந்து ஏழரை மணிக்குள் இந்த நிகழ்வு இடம் பெறுகிறது. இதில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து தலைமை தாங்குகிறார்.
பெரிய. பூபதி வரவேற்புரை நிகழ்த்துகிறார். முனைவர் மு.இளங்கோவன் அறிமுகவுரை நிகழ்த்துகிறார். புதுச்சேரி தாகூர் கல்லூரி முனைவர் ஆ.மணி சிறப்புரை நிகழத்துகிறார். பெருமழைப் புலவரின் உரைச் சிறப்புகள் என்ற பொருளில் உரை நிகழ்த்தப்படும்.
முனைவர் க. திருமலைவாசன் நன்றியுரை நவில்வார். நிகழ்ச்சி ஏற்பாட்டினைப் புதுச்சேரி இலக்கிய வட்டம் அமைப்பினர் செய்துள்ளனர்.
மேலும் தொடர்புக்கு: 0091 9442029053
செய்தி: முனைவர் மு. இளங்கோவன்












Click it and Unblock the Notifications