என்னவள் ஒரு தேவதை!
Subscribe to Oneindia Tamil
பயணம் முடிந்ததும்
நீ வீசிவிட்டுப்போன
உன் பயணச்சீட்டு
முன்பதிவு செய்தது
என் வாழ்க்கைப் பயணத்தை...
ஜாதகத்தில் நம்பிக்கை
இல்லையா உனக்கு?
உள்ளங்கை
ரேகைகளை மருதாணியிட்டு
மறைக்கிறாய்?...
இதழ் ரேகைகளை
உதட்டுச்சாயம் பூசி
மறைக்கிறாய்?...
உன்னைப்பார்க்கும்
நேரம் என் இதயம்
துடித்ததா?
நினைவில்லை...
இதயத்திலிருக்கும் நீ
எப்படி நேரிலே தெரிகிறாய்
என்ற யோசனையில்
நிற்கையில் என்னிடம்
நானே இல்லை...
புவி ஈர்ப்புவிசை விதிகள்
பொய்த்துப் போவது
என் இதயத்தில்தான்...
அது விழுந்தால்
உன்னிடம் மட்டுமே
விழுகிறது...
நேரம் போனால்
வராது என்பார்கள்...
நீ வந்துவிட்டால்
நேரம் போவதே
தெரிவதில்லை...
நீ வரும்வரை
நேரத்தைப்பற்றி
எனக்கு அக்கரையில்லை...
ஆகையால்
அது போனால் என்ன?
வந்தால் என்ன?












Click it and Unblock the Notifications