தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் போட்டியிட தயங்குவது ஏன்?
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்பு கர்நாடக மாநிலம் பெல்லாரியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் அப்பதவியை ராஜினாமா செய்தார். அத்தேர்தலில் அவரை எதிர்த்து மோதி தோல்வியைத் தழுவியவர் பாஜகவின் சுஷ்மா சுவராஜ். இப்போது சோனியாவின் மகன் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். ஒரு வேளை அமேதி மற்றும் வயநாட்டில் வென்றால் வயநாட்டை நிச்சயம் ராகுல் காந்தி விட்டுத் தருவார் என்றே தெரிகிறது.

இவர்களைத் தவிர வேறு எந்த தேசியத் தலைவரும் இதுவரை தென்னிந்தியாவில் போட்டியிட்டதில்லை. ஆனால் அதை விட முக்கியமாக, தமிழகத்தில் இதுவரை எந்த தேசியத் தலைவரும் போட்டியிட்டதில்லை. போட்டியிடவும் முன்வந்ததில்லை. ஏன் இந்த நிலை.. இதற்கு ஏதேனும் சிறப்புக் காரணம் இருக்கிறதா. தமிழகத்தில் போட்டியிட தேசியத் தலைவர்கள் தயங்குவது ஏன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்று தேசியத் தலைவர்கள் சர்வ சாதாரணமாக பேசுகிறார்கள். ஆனால் அந்த தமிழகத்தில் போட்டியிட தயங்குவதற்கு என்ன காரணம்.
வாருங்கள் விவாதிக்கலாம்.












Click it and Unblock the Notifications