யுலியா டிமோசென்கோ விடுதலை
போராட்டக்காரர்கள் அரசுக் கட்டடங்களை விட்டு வெளியேறினால் பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்தார் யனுகோவ்ச். ஆனால் மக்கள் செவி சாய்க்கவில்லை.

இதையடுத்து பிப்ரவரி 21ம் தேதி எதிர்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தார் அதிபர் யனுகோவ்ச். விரைவில் தேர்தல் நடத்த ஒப்புக் கொண்டதோடு, அவரது அதிகாரத்தையும் உடனடியாகக் குறைக்க ஒப்புக் கொண்டார். யனுகோவ்ச் அரசால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமரும் எதிர்க் கட்சியின் முக்கியத் தலைவருமான யுலியா டிமோசென்கோவை உடனடியாக விடுதலை செய்து நாடாளுமன்றம் உத்தரவிட்டது.
22ம் தேதி அதிபர் யனுகோவ்ச்சையே பதவி நீக்கம் செய்து உக்ரைன் நாடாளுமன்றம் உத்தரவிட்டது. மே 25ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தது. சபாநாயகர் ஒலக்ஸாண்டர் டர்ச்சினோவ் இடைக்கால அதிபராக அறிவிக்கப்பட்டு, புதிய இடைக்கால அரசும் நியமிக்கப்பட்டது. பிரதமராக அர்செனிவ் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications