'எஸ்கேப்' யுனுகோவ்ச்
இந்த அரசு உடனடியாக யுனுகோவ்ச்சை கைது செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அவர் இரவோடு இரவாக தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் தலைநகர் கிவியில் உள்ள தனது மாளிகையில் இருந்து குடும்பத்துடன் தப்பினார். அவர் எங்கு தப்பிச் சென்றார் என்ற விவரம் தெரியாத நிலையில், ரஷ்யாவில் அடைக்கலம் அடைந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
இந் நிலையில் பிப்ரவரி 26ம் தேதி உக்ரைன் எல்லைப் பகுதியில் போர் பயிற்சியைத் தொடங்கியது.
27ம் தேதி ரஷ்ய ஆதரவுப் படையினர் முகமூடிகளுடன் உக்ரைன் தலைநகரில் உள்ள முக்கிய அரசு அலுவலகங்களைக் கைப்பற்றினர். யனுகோவ்ச் தனது நாட்டில் தான் உள்ளதாகவும் அவருக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் அளிக்கப்படும் என்றும் ரஷ்யா அறிவித்தது.
28ம் தேதி ரஷ்ய ஆதரவுப் படையினர் உக்ரைனின் கிரைமியா பகுதியின் முக்கிய விமான நிலையங்களைக் கைப்பற்றினர். ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் அவசரமாகக் கூடி நிலைமையை ஆலோசித்தது. உக்ரைனுக்குள் ரஷ்ய ராணுவம் ஊடுருவினால் கடும் விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்தார்.