பாவம், கடலை விற்றவரையே ஒல்லியாக வைத்த ஞானதேசிகன்!
-ஏ.கே.கான்
ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவரான பின் சத்தியமூர்த்தி பவனுக்கு நிருபர்கள் ரெகுலராக செல்வது அதிகரித்திருக்கிறது. இது நிருபர்களுக்கு ஒதுக்கப்படும் ரெகுலர் பீட் தான். ஆனால், ஞானதேசிகன் 'ஞானப்பழம்' விற்றுக் கொண்டிருந்தபோது அங்கு தினமும் போவதே பெட்ரோல் வேஸ்ட் என்று நிருபர்கள் அவாய்ட் செய்துவிட்டனர். பிரஸ்மீட் என்று கூப்பிட்டால் மட்டுமே சென்றனர். அதுவும் கூட பெரும் போர் அடிக்கும். 'தேஷிய' மொழியில் ஏதேதோ சொல்வார். பல நேரம் தன்னைத் தானே விமர்சித்து சேம் சைட் கோல் வேறு போடுவார்.
இதனால் நிருபர்கள் மட்டுமல்ல, தொண்டர்களும் சத்தியமூர்த்தி பவன் பக்கம் வருவது குறைந்து போய், அங்கே சைக்கிளில் வறுத்த கடலை விற்று வந்தவரின் பிஸினஸ் மாடலையே காலி செய்தவர் ஞானதேசிகன்.

இப்போது இளங்கோவன் வாயிலேயே பொங்கல் சமைத்து பரிமாறுபவர் என்பவர் தினமும் ஏதாவது ஒரு சிங்கிள் காலம் ஸ்டோியாவாது சத்தியமூர்த்தி பவன் பக்கம் கிடைத்து வருகிறது. இதனால் அங்கு ரெகுலராக செல்ல ஆரம்பித்துள்ளனர் நிருபர்கள். அந்த கடலை விற்பவரை மீண்டும் அந்தப் பக்கம் பார்க்க முடிகிறது. ஆனால், கடந்த 2 வருடத்தில் ரொம்பவே மெலிந்து போய்விட்டார் அந்த மனிதர். பிஸினஸ் அந்த அளவுக்கு அடி. இதற்கு ஞானதேசிகன் பதில் சொல்லியே ஆக வேண்டும்!!.
இப்போது வாசன் தரப்பும் தினமும் ஏதாவது வெடியைப் போட்டு நியூஸ் ஆக்கிக் கொண்டிருக்கும் நிலையில் குஷ்புவின் வரவு காங்கிரசுக்கு ரொம்பவே உதவும்.
வெறுமனே ட்விட்டரில் மட்டுமே ட்வீட்டிக் கொண்டிருக்காமல் குஷ்பு சத்தியமூர்த்தி பவன் பக்கமும் வந்து மற்ற கட்சிகளை பந்தாடினால் காங்கிரசுக்கு புது உத்வேகம் நிச்சயம் கிடைக்கும்.
குறிப்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் தமிழக காங்கிரஸ் சார்பில் பேசவாவது குஷ்புவின் வரவு உதவியாக இருக்கும். இல்லாவிட்டால் அமெரிக்க நாராயணன் மாதிரியான ஆட்கள் அர்னாப் கோஸ்வாமி மாதிரியானவர்களிடம் வாலன்டியராக வந்து மாட்டி தமிழக காங்கிரசின் மானத்தை வார்ம்ஹோல் வழியாக இன்னொரு கிரகத்துக்கு விண் கப்பலில் ஏற்றி தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருப்பதை தவிர்க்க முடியாமல் போயிருக்கும்.
இதைப் பார்த்து காங்கிரஸ் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்ததையும் தடுக்க முடியாமல் போயிருக்கும்.
ஆக, உங்களை கட்சியில் சேர்க்க பல்வேறு காரணங்களில் முக்கிய காரணமான அமெரிக்க நாராயணனுக்கு நன்றி சொல்லி ஒரு ட்வீட் போட்டு விடுங்க குஷ்பு மேடம்!
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications