கரன்சியின் மதிப்பை குறைப்பதால் சீனாவுக்கு என்ன லாபம்?.
அதன் இறக்குமதிகள் குறையும். அதாவது சீனாவுக்குள் பொருட்களை இறக்குமதி செய்ய அதிகமான டாலர்கள் தேவைப்படும். இதனால் இறக்குமதிகள் தானாகவே குறையும். அதே நேரத்தில் சீனாவின் ஏற்றுமதிகள் அதிகரிக்கும். அதாவது, சீனாவின் ஏற்றுமதிகளுக்குக் கிடைக்கும் டாலரின் அளவு அதிகரிக்கும். இன்னும் எளிமையாக சொன்னால், மற்ற நாடுகளில் விற்பனைக்குச் செல்லும் சீன தயாரிப்புகளின் விலை குறையும்.
சீனாவின் கட்டுமானத் தொழில்கள், ரியல் எஸ்டேட் ஆகியவை விழுந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதே போல சீனாவின் உற்பத்தித் துறையிலும் பெரும் சரிவு. காரணம், பொருட்களை வாங்க மக்களிடம் காசு இல்லை. சமீபத்தில் டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டில் ஒரு அதிர்ச்சியாக விஷயம் இருந்தது. அதன் ஹை எண்ட் கார்களான லேண்ட் ரோவர், ஜாகுவார் ஆகியவற்றின் விற்பனை சரிந்து, ரூ. 2,500 கோடி அளவுக்கு டாடா மோட்டர்ஸ் நிறுவனத்துக்கு நஷ்டம். இந்த விற்பனை சரிவு பெருமளவில் நடந்தது சீனாவில் தான். ஆக, ஆட்டோமொபைல்ஸ் விற்பனையிலும் சீனாவில் பெரும் அடி ஏற்பட்டுள்ளது வெளியே தெரியவந்தது.

அதே போல உலகளவில் பெரும் சரக்குக் கப்பல்களுக்கு நடக்கும் அட்வான்ஸ் புக்கிங்கிலும் பெரும் ஓட்டை. கப்பல்களை புக் செய்ய ஆர்டர்கள் கிடைக்கவில்லை. அதில் 10 சதவீதம் அளவுக்கு அடி விழ, அந்தப் பிரச்சனைக்கும் சீனா தான் காரணம் என்பது தெரியவந்தது. ஆக, சீனாவின் ஏற்றுமதி, இறக்குமதியிலும் பெரும் சரிவு. ஆனால், இதையெல்லாம் முடிந்தவரை சீனா மறைத்த வந்தது.












Click it and Unblock the Notifications