ஜூலையில் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! எப்படி விண்ணப்பிப்பது?
சென்னை: தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு, இன்று (மே 26) முதல் மாணவர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் க.சசிகலா வெளியிட்டுள்ள முக்கியத் தகவல்கள் இதோ:

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த, வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும், விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்தும் இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பள்ளி மாணவர்களாக எழுதியவர்களில் தேர்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்குச் சென்று செவ்வாய்க்கிழமை (மே 26) முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வர்கள் இதே காலகட்டத்தில் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். சேவை மைய விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் கட்டாயமாக தங்களது ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
தேர்வுக் கட்டணம்
தேர்வுக் கட்டணமாக ரூ.125, இணையவழி பதிவுக் கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.195 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தைப் பள்ளியில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் பள்ளியிலும், தனித்தேர்வர்கள் சேவை மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும்.
தட்கல் முறையில் விண்ணப்பிக்க
ஜூலையில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு மேற்கண்ட நாட்ளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தட்கல்) உரிய விண்ணப்பத் தொகையுடன் ஜூன் 9, 10 ஆகிய நாள்களில் பள்ளியில் அல்லது சேவை மையத்தில் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த முறையில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.125, தட்கல் சிறப்புக் கட்டணம் ரூ.500, இணையவழி பதிவு கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.695 செலுத்த வேண்டும். அதேவேளை, 2026 ஆம் ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவர்களுக்கு மட்டும் தட்கல் சிறப்புக் கட்டணம் ரூ.500 விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே, அவர்கள் வழக்கமான கட்டணமான ₹195 மட்டும் செலுத்தினால் போதுமானது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications