மேகதாது அணை.. தமிழகத்துக்கு குட்நியூஸ் கூறிய காவிரி மேலாண்மை தலைவர் எல்கே ஹல்தர்.. கர்நாடகா ஷாக்
திருச்சி: கர்நாடகா அரசு காவிரிக்கு குறுக்காக மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் திருச்சி - தஞ்சை மாவட்ட எல்லையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையை காவிரி நீர் மேலாண்மை ஆணயை தலைவர் எல்கே ஹல்தர் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மேகதாது அணை விவகாரம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட ஒன்று. அதுபற்றி இனி விவாதிக்க மாட்டோம் என்று காவிரி நீர் மேலாண்மை தலைவர் எல்கே ஹல்தர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நீர் பங்கீடு செய்வதில் பிரச்சனை உள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்பார்வையில் கர்நாடகா நமக்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்காணித்து வருகிறது.

இதற்கிடையே தான் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் புதிய அணை ஒன்றை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில் தான் காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எல்கே ஹல்தர் தமிழகத்துக்கு குட்நியூஸ் சொல்லி உள்ளார்.
ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் காவிரி நீர் வழிப்பாதையை ஆய்வு மேற்கொள்வார். அந்த வகையில் தான் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எல்கே ஹல்தார் நேற்று மேட்டூர் அணையை பார்வையிட்டார்.
இதையடுத்து இன்று திருச்சி முக்கொம்பு அணையை பார்வையிட்டார். பிறகு இன்று மதியம் கல்லணையை பார்வையிட்டார். அதன்பிறகு காவிரி ஆறு விளக்க கூடத்தை பார்வையிட்டார். இந்த வேளையில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் பிஆர் பாண்டியன் சார்பில் எல்கே ஹல்தாரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
அப்போது மேகதாதுவில் கர்நாடகா புதிய அணை கட்டக்கூடாது. அதற்கு அனுமதி வழங்க கூடாது என்று கோரிக்கையை வைத்தார். மேலும் கடலில் காவிரி நீர் தடுப்பதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் புதிய அணை கட்ட வேண்டும். அதற்கு நீங்கள் முன்மொழிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து எல்கே ஹல்தர் கூறியதாவது:
‛‛மேகதாதுவில் அணை தொடர்பாக எந்த வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தில் அதுபற்றி இனி விவாதிக்கப்படாது. ஏனென்றால் அந்த விவகாரம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட ஒன்று. காவிரி நீர் பங்கீடு என்பது உச்சநீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் செயல்படும் விஷயம். எந்த மாநிலமும் தனிப்பட்ட முறையில் முடிவுகள் எடுக்க முடியாது'' என்றார். இது தமிழகத்துக்கு குட்நியூஸாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில் கர்நாடகாவுக்கு ஷாக்காக பார்க்கப்படுகிறது.
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக!












Click it and Unblock the Notifications