Fake News: தகன மேடையில் அலறிய "பிணம்".. பதறி எழுந்த மைக்கேல்.. அடுத்த நொடியே சாம்பல்.. இது நிஜமா?
நியூயார்க்: தகன மேடையில் வெப்பம் தாங்காமல் அலறி துடித்து எழுந்தார் மைக்கேல்.. அடுத்த ஓரிரு நொடிகளிலேயே பஸ்பமாகிவிட்டார்.. இப்படி ஒரு கொடுமையான சம்பவம் நியூயார்க்கில் நடந்து ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது... ஆனால் இந்த செய்தி பொய்யானது.
Recommended Video
சீனாவில் ஆரம்பித்த தொற்று... உலக நாடுகளை உலுக்கி வருகிறது.. இதில் கொத்து கொத்தாக மனித உயிர்கள் பலியாகி வருவதில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது!
இங்கு இதுவரை 5 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் 402 பேருக்கு கொரோனா பரவியுள்ளது... குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 22 ஆயிரத்து 105 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.. உயிரிழந்தோர் எண்ணிக்கையோ 22 ஆயிரத்தை கடந்து செல்கிறது.
வல்லரசு
வல்லரசுக்கே இந்த நிலைமையா என்று உலக நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன.. உயிரிழப்பை கட்டுப்படுத்த திணறாமல் விழித்து திணறி வருகிறார் அதிபர் டிரம்ப்.. ஆயிரம், 2 ஆயிரம் என மொத்தமாக ஒவ்வொரு நாளும் மக்கள் இறந்து வருகிறார்கள்.
நியூயார்க்
அதனால் இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது.. நியூயார்க்கில் தினமும் நூற்றுக்கணக்கான பிணங்கள் இறுதி சடங்கும் செய்யும் இடத்தில் குவிகின்றனர்.. இந்த பிணங்களை எரிக்க பணியாளர்கள் பலர் இரவு பகலாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இதை பற்றின ஒரு போலியான தகவல் பரபரப்பட்டு வருகிறது.
பிணங்கள்
அந்த தகவல் இதுதான்: மைக்கேல் என்பவர் தகனம் சடங்கு செய்யும் பணியாளர் இவர்.. பல நாட்களாக குவிந்து வந்த பிணங்களை எரித்து வந்துள்ளார். ஓய்வு என்பது அவருக்கு கொஞ்சமும் இல்லை என்பதால், அங்கிருந்த ஸ்ட்ரெச்சரில் அப்படியே அசதியால் படுத்து தூங்கிவிட்டார். படுத்திருப்பது மைக்கல் தான் என்பது சக ஊழியருக்கு தெரியாது.. வழக்கமாக ஸ்டெர்ச்சரில் பிணங்கள்தான் இருக்கும் என்பதால், மைக்கல் படுத்திருப்பதை கவனிக்கவில்லை.
போலியான தகவல்
தூங்கி கொண்டிருந்தவரை அப்படியே தூக்கி மின்மயானத்தில் வைத்து எரித்து விட்டார்.. அந்த தகன மேடையில் 1400 டிகிரி வெப்பத்தில்தான் பிணங்கள் எரிக்கப்படும்.. திடீரென உடம்பில் கரண்ட் பட்டதும் அலறினார் மைக்கேல்.. ஒரு செகண்ட்தான்.. அப்படிது சம்பந்தமான விசாரணையும் நடக்கிறது. இதுதான் அந்த போலியான தகவல். எரிகிற கொள்ளியில் எண்ணையை ஊற்றுவது போல மேலும் மேலும் பல போலியான செய்திகள் இணையத்தில் றெக்கை கட்டி வருவது மேலும் வேதனையை தருகிறது.