Fact Check: மின் கட்டணம் அப்டேட் ஆகல..இணைப்பு துண்டிப்பு..சமூக ஊடகங்களில் பரவும் கடிதம்..உண்மை என்ன?
டெல்லி: மத்திய மின் துறை அமைச்சகத்தின் பெயரில் நுகர்வோர்கள் பலருக்கும் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அதில், மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க உடனடியாக கட்டணம் செலுத்தியதற்கான ரசீதை தங்கள் பிரதிநிதியை தொடர்பு கொண்டு அப்டேட் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மின் துறை பெயரில் வெளியான இந்தக் கடிதம் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதைய ஸ்மார்ட் உலகில் எந்த ஒரு தகவல்களும் நொடிப்பொழுதில் அனைவரையும் சென்றடைந்து வருகிறது. இதற்கு தற்போதைய சமூக வலைதளங்களே காரணம் என்று எளிதில் சொல்லிவிடலாம்.
தகவல் தொடர்பு வசதி அபரிமிதமாக பெருகிவிட்டதால் மக்களுக்கு தகவல்கள் விரைவாக சென்று சேர்ந்து விடுவதில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் வதந்திகளும் அதற்கு சமமாக பரவிவிடுகிறது.

பொய்யான தகவல்கள்
குறிப்பாக அரசு நலத்திட்டங்கள் குறித்த பல பொய்யான தகவல்கள் பரவுகின்றன. மக்கள் மத்தியில் பரவும் இத்தகைய வதந்திகளால் தேவையற்ற குழப்பங்கள் உருவாவதோடு பீதியும் ஏற்படுவது ஒருபக்கம் என்றால் தகவல்கள் திருட்டு ஒருபக்கம் நடைபெறுகிறது. அரசின் நலத்திட்டங்கள் குறித்த வதந்திகள், வங்கிகளில் இருந்து மெசேஜ் அனுப்புவதை போன்று அனுப்புவது என பல மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

பரவி வரும் கடிதம்
வங்கிக் கணக்கு போன்றவற்றில் இருந்து பணத்தை திருடுவது என பலவகையான மோசடிகளும் ஒரு பக்கம் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மத்திய மின் துறை அமைச்சகத்தின் அறிவிப்பு என்ற பெயரில் ஒரு லெட்டர் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவிவருகிறது. மின் நுகர்வோர்கள் சிலருக்கு நேரடியாக இந்த கடிதம் மெயில் போன்றவற்றில் அனுப்பப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ரசீதை அப்டேட் செய்ய வேண்டும்
அதில், கடந்த மாதத்திற்கான மின்கட்டணத் தொகை அப்டேட் ஆகவில்லை என்றும் குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்டு மின் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இல்லையென்றால் இன்று நள்ளிரவிற்குள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

உண்மை என நம்பி..
அசல் கடிதத்தை போலவே சித்தரித்து அனுப்பப்பட்டு இருந்ததால் இந்தக் கடிதம் உண்மையானது என நம்பிய பலரும் இதை தங்களுக்கு பகிர்ந்ததாக தெரிகிறது. மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்ததால் மக்கள் மத்தியில் சற்று பயம் ஏற்பட்டது. பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இதுபற்றி விசாரித்ததோடு, கூகுளிலும் தேடத்தொடங்கினர்.

எந்த ஒரு கடிதமும் வெளியிடப்படவில்லை
இந்த நிலையில், மத்திய அரசின் பிஐபி இந்தக் கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பிஐபி ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:- மத்திய மின் துறை அமைச்சகம் பெயரில் வெளியாகி இருக்கும் இந்த கடிதம் போலியானது. மத்திய மின் துறை அமைச்சகத்தில் இருந்து இதுபோன்ற எந்த ஒரு கடிதமும் வெளியிடப்படவில்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
கடந்த மாதம் மின் கட்டணத்தை நீங்கள் செலுத்தியது அப்டேட் ஆகவில்லை. எனவே, நீங்கள் செலுத்தியதற்கான பில்லை எங்களிடம் அப்டேட் செய்ய வேண்டும் என மின் துறை அமைச்சகத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் தகவல் பரவி வரு
முடிவு
அந்தக் கடிதம் போலியானது. மின் துறை அமைச்சகத்தில் இருந்து அதுபோன்ற எந்த ஒரு கடிதமும் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications