திருட்டு பயம்.. பர்தா, ஹிஜாப் அணிந்த பெண்களுக்கு தமிழக நகைக்கடைகளில் அனுமதியில்லை? உண்மை என்ன?
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நகைக் கடைகளில் நடக்கும் கொள்ளை திருட்டு சம்பவங்களை தொடர்ந்து புர்கா, பர்தா, ஹிஜாப் போன்றவற்றை அணிந்தவர்களுக்கு தமிழகத்தின் நகை கடைகளில் அனுமதி இல்லை என நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த நிலையில் அது பொய்யான தகவல் என்பதும், உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் வெளியிடப்பட்ட தகவல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டது போல வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட நிலையில் போலி செய்திகளும் பொதுமக்களிடையே பீதியை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமய, சாதி, சமூகம் சார்ந்த வதந்திகள் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தை புண்படுத்தும் வகையில் போலி செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

அதாவது வட மாநிலங்களில் பர்தா, புர்கா, ஹிஜாப் அணிந்த பெண்கள் நகை கடைகளில் திருட்டு சம்பவங்களை ஈடுபடுவதைப் போலவும், நகை வியாபாரிகள் அவர்களை கையும் களவுமாக பிடிப்பது போலவும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் உலா வந்தது.
இதற்கிடையே தமிழகத்தின் பிரபல நாளிதழ் ஒன்றின் பெயரை பயன்படுத்தி," பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்ய மாட்டோம். பல மாவட்டங்களில் நகை கடைகளில் நடக்கும் கொள்ளை திருட்டு சம்பவங்களை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புர்கா, பர்தா, ஹிஜாப் போன்றவற்றை அகற்றிவிட்டே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்" என நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக பேக்ட் செக் செய்தபோது, இது போலியான செய்தி என்றும், உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றை தமிழக நகைக்கடை விற்பனையாளர்கள் அறிவித்தது போல சமூக வலைதளங்களில் தவறான செய்தி பகிரப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
" பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்ய மாட்டோம். பல மாவட்டங்களில் நகை கடைகளில் நடக்கும் கொள்ளை திருட்டு சம்பவங்களை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புர்கா, பர்த
முடிவு
உண்மையில் இது பொய்யான செய்தி ஆகும். உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றை தமிழக நகைக்கடை விற்பனையாளர்கள் அறிவித்தது போல சமூக வலைதளங்களில் தவறான செய்தி பகிரப்பட்டு வருகிறது.
ரேட்டிங்
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications