Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருட்டு பயம்.. பர்தா, ஹிஜாப் அணிந்த பெண்களுக்கு தமிழக நகைக்கடைகளில் அனுமதியில்லை? உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நகைக் கடைகளில் நடக்கும் கொள்ளை திருட்டு சம்பவங்களை தொடர்ந்து புர்கா, பர்தா, ஹிஜாப் போன்றவற்றை அணிந்தவர்களுக்கு தமிழகத்தின் நகை கடைகளில் அனுமதி இல்லை என நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த நிலையில் அது பொய்யான தகவல் என்பதும், உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் வெளியிடப்பட்ட தகவல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டது போல வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட நிலையில் போலி செய்திகளும் பொதுமக்களிடையே பீதியை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமய, சாதி, சமூகம் சார்ந்த வதந்திகள் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தை புண்படுத்தும் வகையில் போலி செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

Fact Check Hijab Tamil Nadu

அதாவது வட மாநிலங்களில் பர்தா, புர்கா, ஹிஜாப் அணிந்த பெண்கள் நகை கடைகளில் திருட்டு சம்பவங்களை ஈடுபடுவதைப் போலவும், நகை வியாபாரிகள் அவர்களை கையும் களவுமாக பிடிப்பது போலவும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் உலா வந்தது.

இதற்கிடையே தமிழகத்தின் பிரபல நாளிதழ் ஒன்றின் பெயரை பயன்படுத்தி," பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்ய மாட்டோம். பல மாவட்டங்களில் நகை கடைகளில் நடக்கும் கொள்ளை திருட்டு சம்பவங்களை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புர்கா, பர்தா, ஹிஜாப் போன்றவற்றை அகற்றிவிட்டே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்" என நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக பேக்ட் செக் செய்தபோது, இது போலியான செய்தி என்றும், உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றை தமிழக நகைக்கடை விற்பனையாளர்கள் அறிவித்தது போல சமூக வலைதளங்களில் தவறான செய்தி பகிரப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

Fact Check

வெளியான செய்தி

" பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்ய மாட்டோம். பல மாவட்டங்களில் நகை கடைகளில் நடக்கும் கொள்ளை திருட்டு சம்பவங்களை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புர்கா, பர்த

முடிவு

உண்மையில் இது பொய்யான செய்தி ஆகும். உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றை தமிழக நகைக்கடை விற்பனையாளர்கள் அறிவித்தது போல சமூக வலைதளங்களில் தவறான செய்தி பகிரப்பட்டு வருகிறது.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+