திருட்டு பயம்.. பர்தா, ஹிஜாப் அணிந்த பெண்களுக்கு தமிழக நகைக்கடைகளில் அனுமதியில்லை? உண்மை என்ன?
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நகைக் கடைகளில் நடக்கும் கொள்ளை திருட்டு சம்பவங்களை தொடர்ந்து புர்கா, பர்தா, ஹிஜாப் போன்றவற்றை அணிந்தவர்களுக்கு தமிழகத்தின் நகை கடைகளில் அனுமதி இல்லை என நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த நிலையில் அது பொய்யான தகவல் என்பதும், உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் வெளியிடப்பட்ட தகவல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டது போல வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட நிலையில் போலி செய்திகளும் பொதுமக்களிடையே பீதியை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமய, சாதி, சமூகம் சார்ந்த வதந்திகள் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தை புண்படுத்தும் வகையில் போலி செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

அதாவது வட மாநிலங்களில் பர்தா, புர்கா, ஹிஜாப் அணிந்த பெண்கள் நகை கடைகளில் திருட்டு சம்பவங்களை ஈடுபடுவதைப் போலவும், நகை வியாபாரிகள் அவர்களை கையும் களவுமாக பிடிப்பது போலவும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் உலா வந்தது.
இதற்கிடையே தமிழகத்தின் பிரபல நாளிதழ் ஒன்றின் பெயரை பயன்படுத்தி," பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்ய மாட்டோம். பல மாவட்டங்களில் நகை கடைகளில் நடக்கும் கொள்ளை திருட்டு சம்பவங்களை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புர்கா, பர்தா, ஹிஜாப் போன்றவற்றை அகற்றிவிட்டே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்" என நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக பேக்ட் செக் செய்தபோது, இது போலியான செய்தி என்றும், உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றை தமிழக நகைக்கடை விற்பனையாளர்கள் அறிவித்தது போல சமூக வலைதளங்களில் தவறான செய்தி பகிரப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
" பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்ய மாட்டோம். பல மாவட்டங்களில் நகை கடைகளில் நடக்கும் கொள்ளை திருட்டு சம்பவங்களை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புர்கா, பர்த
முடிவு
உண்மையில் இது பொய்யான செய்தி ஆகும். உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றை தமிழக நகைக்கடை விற்பனையாளர்கள் அறிவித்தது போல சமூக வலைதளங்களில் தவறான செய்தி பகிரப்பட்டு வருகிறது.
ரேட்டிங்
-
நிலம் வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஹென்றி சொன்ன இந்த மேஜர் விஷயத்தை பாருங்க.. அப்புறம் முடிவெடுங்க -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications