மீண்டும் பரப்பிவிடப்பட்ட 'தோனிக்காக ரூ. 7 சிறப்பு நாணயம் வெளியிடும் மத்திய அரசு'- உண்மை என்ன?
டெல்லி: கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் தோனியை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசு ரூ7 சிறப்பு நாணயம் வெளியிடப் போவதாக கடந்த ஆண்டே தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் ரிசர்வ் வங்கி தரப்பில் அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் தோனிக்காக ரூ7 சிறப்பு நாணயம் வெளியிடப்படும் என தகவல்கள் பகிரப்படுகிறது; இதில் எந்த ஒரு உண்மையும் இல்லை என மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் மறுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சிறப்பு செய்வதற்காக ரூ7 சிறப்பு நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடப் போவதாக சில மாதங்களுக்கு முன்னர் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. தோனியின் படத்துடன் இந்த நாணயம் வெளியிடப்படுகிறது என சில படங்களும் பகிரப்பட்டன. இதனை தோனி ரசிகர்களும் கொண்டாடி இருந்தனர். ஆனால் அப்போது மத்திய அரசு இது போலி செய்தி என மறுத்திருந்தது.

தற்போது மீண்டும் அதேபோல ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம், மீண்டும் இது போலியான செய்தி என உறுதிப்படுத்தி உள்ளது. பொருளாதார விவகாரங்கள் துறை இத்தகைய அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை என்றும் பத்திரிகை தகவல் அலுவலகம்.


Fact Check
வெளியான செய்தி
தோனியை சிறப்பிக்க ரிசர்வ் வங்கி ரூ7 சிறப்பு நாணயம் வெளியிடுகிறது என சமூக வலைதளங்களில் மீண்டும் பகிரப்பட்டது.
முடிவு
மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் இதனை மறுத்துள்ளது












Click it and Unblock the Notifications