மபி பாஜக முதல்வர் பேசும்போது.. மேடைக்கு பறந்து வந்த செருப்பு! பகீர் வீடியோ உண்மையா? FACT CHECK
சென்னை: மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மேடையில் பேசும்போது அவர் மீது காலனி வீசப்பட்டதாக வெளியான வீடியோவின் உண்மை தன்மை பற்றி அலசுவோம்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்த தேர்தலில் பாஜகவை வெற்றிபெற வைக்கும் முனைப்புடன் அவர் தற்போது பல்வேறு இடங்களுக்கு சென்று பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஒரு பொதுக்கூட்ட மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது, கூட்டத்தில் இருந்து செருப்பு பாய்ந்து வந்து அவர் மீது விழுகிறது. உடனே பாதுகாவர்கள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹானை மேடையில் சுற்றி வளைத்துக்கொள்கிறார்கள்.
இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த "ஜீரோ நானே" என்ற ஐடி, "#சம்பவம்: மத்தியப்பிரதேச பாஜக கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த பாஜக முதல்வர் மீது செருப்பு வீச்சு. மபியில் இருந்து பாஜகவை செருப்பால் அடித்து விரட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார். இதேபோல் பலரும் இந்த வீடியோ பதிவிட்டு வருகிறார்கள்.
வீடியோ பார்க்கையில் உண்மைபோல் தெரிந்தாலும் அதன் உண்மை தன்மை என்னவென்று நாம் ஆராய்ந்தோம். இந்த செய்தி மற்றும் வீடியோ வேறு எங்கெல்லாம் வெளியாகி உள்ளது என இணையத்தில் தேடினோம். அப்போதுதான் பிரபல ஆங்கில தொலைக்காட்சியான NDTV யின் யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால், 5 ஆண்டுகளுக்கு முன்.
#சம்பவம்: மத்தியப்பிரதேச பாஜக கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த பாஜக முதல்வர் மீது செருப்பு வீச்சு🔥
— ஜீரோ நானே⭕ (@Anti_CAA_23) September 7, 2023
* மபியில் இருந்து பாஜகவை செருப்பால் அடித்து விரட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள்👏👏 pic.twitter.com/ZLc0quIRkw
கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த சிவராஜ் சிங் சவுஹான் சித்தி என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது நடந்த சம்பவம் இதுவாகும். கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி இந்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
அதில் செருப்பு வீசியதாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேபோல் முதலமைச்சர் சென்ற பேருந்தின் மீது கற்களும் வீசப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தாக்குதல்களுக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் எனவும் சிவராஜ் சிங் சவுஹான் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பழைய வீடியோவை புதியது போல் பரப்பி வந்தது உறுதியாகிறது.

Fact Check
வெளியான செய்தி
மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் மீது பொதுமக்கள் செருப்பு வீசியதாக பரவும் வீடியோ
முடிவு
வீடியோ உண்மையானது. ஆனால், 5 ஆண்டுக்கு முன் நடந்த சம்பவத்தை புதியது போல் பரப்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications